நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்!
அக்டோபர் 18, 2011 at 10:39 மு.பகல் 1 மறுமொழி
மலரை சுவைக்க வரும்
வண்டுபோல என் வருகை ஏனோ
சாதுவாயிருக்கிறது!
பின் பூனையிடம் மாட்டிய
எலிபோல விளையாட்டு
வேகமெடுக்கிறது!
புலியென மாறி பாய்ந்து
வெறிகொண்டு மானை சிராய்த்து
கடித்து வைக்கிறேன்
கொஞ்சம் மூர்க்கமாய்!
யானை பலமும்,குதிரை வேகமும் கொண்டு
உன்னை தாக்கி மகிழ்கிறேன்
கொடூரத்தின் உச்சமாய்!
நீ தாக்குதலை எதிர்கொண்டு
தயங்காமல் நிற்கிறாய்
நிராயுதபாணியாய் நின்றபடி
இன்னும் தாக்க சொல்கிறாய்!
சாது போல இருந்தவள் என்னை
மோத சொல்லி கேட்கிறாய்!
தாக்குதலை தொடுத்து விட்டு
குருதிவடிய நான் குப்புற விழுகிறேன்
பூவென இருந்து கொண்டு
நீ புலியை சாய்த்து வெல்கிறாய்!
என்ன மாயம் செய்தாயோ
நான்கு சுவற்றுக்குள்
நடக்கும் போரில்!
Entry filed under: கவிதைகள். Tags: அணைப்பு, அன்பு, அரவணைப்பு, ஆர்வம், இலக்கியம், ஈடுபாடு, உணர்வு, உண்மை, கற்பழிப்பு, கற்பு, காதல், காமம், செக்ஸ், செயல், செய்தி, நெகிழ்ச்சி, நேசம், படைப்பாளி, படைப்பு, பாசம், முத்தம், மோகம்.









1.
வேல்முருகன் | 8:49 பிற்பகல் இல் அக்டோபர் 18, 2011
கலவியில்
களறி பயிற்சி
கன்னி செய்தால்
காளை என்செய்வான்