Posts filed under ‘நிர்வாணம்’

நிர்வாணம்-5

நிர்வாணம்-விளம்பரம்

united colors of benetton ad

ஒரு பொருள் வாங்குவதற்கோ,விற்பதற்கோ விளம்பரம் இன்றியமையாத் தேவையாகி விட்டது.பல விளம்பரங்களில் நிர்வாணமும் தேவை என நிலைத்து விட்டது.

இது விளம்பரத்தன்மை,உணர்த்தும் கருத்து தேவையை பொருத்து வேறுபடுகிறது ..

விளம்பரங்கள் ,விரைவில் வாடிக்கையாளர்களை சென்றடையவும்,பார்வையாளர்களை பார்க்க வைப்பதற்காகவும் ,சில உவமை,உருவகங்களை உள்ளடிக்கியும் எடுக்கப்படுகின்றன.சோப்பு,பைக் போன்ற விளம்பரங்கள் பெண்களை உவமையாக காட்டி,அவளைப்போல்

அழகானது,கவர்ச்சியானது,மென்மையானது என்ற கருத்தை மக்களுக்கு போதிப்பவையாகவும் அமைந்து விடுகின்றன.

அழகியல் உணர்வுகளை எடுத்துக் காட்டவும்,இயற்கையானது,செயற்கை தனமில்லாதது போன்ற நோக்கங்களில்,பலப்பல எண்ணங்களின் வெளிப்பாடுகளில் வடிவமாற்றம் பெற்றும் வருகின்றன.

சில விளம்பரங்கள் கட்டாயமாக,இதை இப்படித்தான் செய்ய வேண்டும்,மக்களுக்கு இதனை பற்றிய ஆக்கம் இப்படித்தான் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலும் எடுக்கப் படுகின்றன.சில விளம்பரங்கள் நிர்வாணமாய் இருந்தாலும்,நகைச்சுவையாகவும்,சொல்ல வந்த கருத்தை முன்னிறுத்தும் விதமாகவும் அமைக்கப்படுகின்றன.சபலம் தூண்டும் விதத்தில்இல்லை.

அவை சில காண்டம்ஸ்,மருந்து மற்றும் கிரீம் விளம்பரங்கள் என அந்தரங்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

அதனைப் பற்றிய கருத்தை மக்களுக்கு வெளிக்கொணர,ஆதாரமான “நிர்வாண மாடல்களை”காட்டுவது,கருத்தை தெளிவுபடுத்துவதில்,தீர்மானமான விசயமாக தென்படுகிறது.கட்டாயத்தையும் வலியுறுத்துகிறது.

-நிர்வாணம் நீளும்..

ஓகஸ்ட் 10, 2010 at 10:28 முப 1 மறுமொழி

நிர்வாணம்-4

நிர்வாணம்-சினிமா

அக்காலம் முதல் இக்காலம் வரை,மக்களுடனான நேரடித் தொடர்பில் அதிகப் பங்கு திரைப்படத்திற்கு உண்டு.அதனில் வரும் சம்பவங்கள்,விரைவில் மக்களையும் சென்றடைகின்றன.

இப்படி மக்களுக்கு அன்றாடம் ஆகிவிட்ட திரைப்படங்களிலும்,நிர்வாணம் என்பது தேவையாகி விட்டது.

சினிமாத் துறையில் சில கதாப் பாத்திரம் எதார்த்தத்தை முன்னிறுத்தும் வகையிலும்,கதையம்சத்தின் கட்டாயத்திற்காகவும்,நிர்வாணத் தேவையை நிலை நிறுத்துகிறது.சமுதாய பங்களிப்புள்ள,கருத்து செறிவை உள்ளடக்கிய திரைப்படங்களில் கூட,பாத்திர அவசியம் கருதி,நிர்வாணக் காட்சியமைப்புகள் கட்டாயமாக்கப் படுகின்றன.

அது பல சமயங்களில் கதை சார்ந்த அமைப்பாக,அந்தக் காட்சியமைப்பின் தேவைக்காக,கண்டிப்பாக வைக்க வேண்டிய சூழலை உள்ளடக்கிய விசயமாக முன்னோக்கி நிற்கின்றன.

உடைபோட்டு மறைக்க வேண்டிய விஷயம்,நான்கு சுவற்றுக்குள் நடைபெறும் விஷயம் என்ற கருத்து இருப்பினும்,ஓர் பார்வையாளனுக்கு,அந்த படைப்பை பற்றிய முழுமையான இலக்கை,எதார்தத்தை,இயக்குநனின் விருப்பத்தை,தேவையை,கடமையை உணர்த்த வேண்டிய கட்டாயம் பல சமயங்களில் அந்தக் காட்சி அமைப்புகளின் வாயிலாகவே தென்படுகிறது.

அதை உற்றுநோக்கி பார்க்கும் போது,கதையம்சத்திற்கு “நிர்வாண காட்சியமைப்புகள்” கட்டாயம் தேவை என எண்னுமளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

எ.கா:டைடானிக்

இப்படத்தில் வரும் நிர்வாணக் காட்சியைப் பார்க்கின்ற போது,தேவையில்லை என எண்ணத் தோன்றுகிறதா?இல்லை.ஏன்?

காட்சியமைப்பு:ஓர் ஓவியன்,காதலியின் மீதுள்ள அதீத காதல் மற்றும் தனது படைப்புத்திறமையை அரங்கேற்ற வேண்டிய கட்டாயம்,கலைஞனின் மனோபாவம்,அவளின் விருப்பம்,(அவன் மீதுள்ள அளவுக்கடந்த அன்பு, காதல் தானே அவளை அங்கே அவனுக்காக நிர்வாணமாக்குகிறது)இப்படி பல்நிலை பொறுப்புகளை அக்காட்சியமைப்பு தாங்கி நிற்கிறது.ஆகவே அது தேவையில்லை எனக்கூற யாரும் முன்வருவாறில்லை.கூறவும் இயலாது.

கதையின் கண்டிப்பு..கட்டாயம்..அங்கே ஆபாசம்,விரசம் தெரிவதில்லை.தேவையின் தேடல் தெரிகிறது.

இந்தியன் படத்தில் கூட ஓர் காட்சியமைப்பு வருகிறது.வெள்ளையர்கள் “நம் நாட்டுப் பெண்களின் உடைக்களைந்து அவர்களை அவமானப்படுத்துதல்”

போன்ற காட்சி.அது அரை நிர்வாணமாகத்தான் காட்டப்படும்,இருந்தாலும் அது கதைக்கான,விவரிக்க வேண்டிய அவசியம் உள்ள காட்சியாகப் படுகிறது.இதுப் போன்ற இடங்களில் நிர்வாண சம்பந்தப்பட்ட காட்சிகள் கட்டாயமாகிறது.

சில திரைப்படங்கள் தாம்பத்யம் பற்றிய அறிவு போதிக்கும் நிலையிலேயும் உள்ளன.அதற்க்கும் நிர்வாணக் காட்சிகள் கட்டாயமாக தேவைப்படுகிறது.

இப்படி பலத்திரைப் படங்களில் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களின் குணாதிசியங்கள் பாத்திர அமைப்புகளைக்காட்ட,கதையை நிலைநிறுத்த,அந்தந்த கதைகளுக்கும்,பாதிரங்களுக்குமேற்ற நிர்வாண காட்சியமைப்புகள் இடம் பெறுதல் அவசியமாகிறது..

(விளம்பரம் வரும்..)

ஓகஸ்ட் 4, 2010 at 10:56 முப 4 பின்னூட்டங்கள்

நிர்வாணம்-3

நிர்வாணம்-சிற்பம்

Goddess Parvati – 12th century – Sarasvati Mahal Museum, Thanjavur

பண்டைய காலந்தொட்டே “நிர்வாணம்” சிற்பங்களில் நீங்கா இடம்பெற்று வந்துள்ளது.இதற்கு ஆதாரங்கள் தான் பழைய காலகோயில் சிற்பங்கள்.

சிற்பங்களில் நிர்வாண உருவங்கள்,உடலமைப்பியலிலும் சரி,அங்க இலக்கணங்களிலும் சரி,மிகை மிஞ்சியதாக,அதாவது (மார்புகள்,பின்தசைகள் போன்றவை)இயல்பு மீறிய உருவ அமைப்புடனையே தென்ப்படுகிறது. இது காண்போருக்கு கூட வாழ்வில் இருப்பதை விட அதிக்கப்படியான ஓர் வடிவமைப்பை படைத்து விட்டதாய் என்ன தோன்றும்.அதிகப்படியான விசயமாக அமைத்துவிட்டார்களோ,என்ற சந்தேகத்தையும் முன்னிறுத்தும்.

ஆனால் அது அமைக்கப்பட்ட நோக்கமோ,காண்போரை கவர்ந்திழுக்கவும்,அழகுக்கு மேலும் அணி சேர்க்கும் நோக்குடனும்,சிற்பங்களுக்கான ஓர் சீர்முறையாகக்கூட காணப்படுகிறது.

அதற்காக எதார்த்த நிலை சிற்பங்களே இல்லையா?? எனக்கூட கேள்விகள் தோன்றும்.ஏன் இல்லை..மைக்கேல் ஆஞ்சலோ வின் சிற்ப்பங்கள் அனைத்துமே எதார்தத்துடனும் சீரிய வேலைப்பாட்டுடனும்,அழகியலையும்,உணர்வுகளையுமே முன்னிறுத்தி நிற்கின்றன.எதார்த்தமான உடலமைப்பு,மாற்றம் பெறாத ,சீரிய சிற்ப முறையை முதலில் கொண்டு வந்த பெருமைக்கூட அவரையே சாரும்.

david sculpture- michelangelo

இன்றைய நிலையில் நவீன சிற்பங்களில் கூட அவரவர் எண்ணங்களுக் கேற்ப சிற்பங்கள் உயிர் பெறுகின்றன.பண்டைய கால சிற்பங்களில் நிர்வாணம் வாழ்வின் சாராம்சமான “தாம்பத்யம்”பற்றி விளக்கவும்,கடவுளின் கலை படைப்பியல்புகளைப் பற்றி விளக்கவும்,ஓர் ஆதாரமான நிலையைக் குறிப்பதாக அமைந்து வந்துள்ளது,என்பதை நாம் நடைமுறை வாயிலாகவும் அறிய இயலும்.

உதாரணமாக,முந்தைய தலைமுறையினர் மணமான புதுதம்பதியனரை “கோவில்குளம்”சென்றுவாருங்கள் என சொல்லி கேள்விப்படிருப்போம்.இன்றும் மணமானவுடன் கோவில் செல்வது நடைமுறையில் உள்ளது. “கோவில்குளம்”சென்றுவாருங்கள் என்பது,புதுமணத்தம்பதியின் அமைதிக்காகவும்,கடவுளின் அருளாட்சிக்காகவும் என்றே நம்பப்படுகிறது.ஆனால் அதன் உட்க்கருத்து அது இல்லை.

அன்றைய காலக்கட்டத்தில் தாம்பத்யம் பற்றியும்,களவியல் முறைகள் பற்றியும்,உடலுறவு மற்றும் வாழ்வின் சாராம்ச முறைகள் பற்றி நேரடியாக,இளையத் தலைமுறைக்கு எடுத்தியம்ப இயலாததொரு சூழல் இருந்தது.

ஆகவே அதனை மறைமுகமாக (கோயில்குளம்) விளக்கும் விதமாகவே கோயில்களில் நிர்வாண நிலையில்,கலவியில் ஈடுபடுதல்,உடலுறவின் பல்வேறு நிலைகளைக் கொண்ட சிற்பங்கள் உருவாக்கப் படுகின்றன.

குக்கிராம கோயில்கள்,தேர்கள் போன்றவற்றில் கூட இவ்வகை சிற்ப வேலைப்பாடுகளை காணலாம்.மேற்கூறிய சிற்பநிலைகளை உள்ளடக்கி புகழ்பெற்ற கோயில்களும் உள்ளன.

எ.கா .கஜுராஹோ,கோனார்க்

khajuraho sculpture

இதனையெல்லாம் யோசித்து பார்க்கின்றபோது,அன்றைய நிலையில், நிர்வாண சிற்பங்கள் ஓர் அறிவு போதிக்கும் விசயமாகவும்,அந்தரங்கங்களைக்கூட அசிங்கமில்லாமல் தருவதற்கோர் வடிகாலாகவும்,இருந்து வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.

அது மட்டுமின்றி அன்றைய காலகட்ட மக்களின் அறிவு வளர்ச்சியையும் அது எடுத்தியம்புகிறது.மக்களுக்கு ஓர் ஆக்கபூர்வமான ,அறிவியல் கண்ணோட்ட அணுகுமுறை இருந்ததையும் நாம் அறிய இயலுகிறது.இன்றைய நவீன காலக்கட்டங்களில் கூட அந்த அணுகுமுறை மழுங்கிவிட்டதோ என்ற எண்ணம் எழுகிறது.அதன் வெளிப்பாடுதான்,தற்போது  பல கோவில்களில்,நிர்வாண சிற்பங்களில் பாலின உறுப்புகள் உடைக்கப் பட்டுள்ளதில்  புலனாகிறது..ஆனால் அன்றைய மக்கள் ஓர் தெளிவான மனநிலைக்கும்,வாழ்க்கையின் சாராம்சங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடனும் இருந்துள்ளது தெளிவு பெறுகிறது.

அப்போ கோயில்கள்,வெள்ளப்பெருக்கு,புயல் மற்றும் இயற்க்கை சீற்றங்கள் பாதிக்கும் நாட்களில் மக்கள் தங்குவதற்கு ஓர் பாதுகாப்பு அரணாகவும் இருந்து வந்துள்ளது .இதன்மூலமும்,அந்தக்கால மற்றும் அறிவியல் அணுகுமுறை மக்களை சென்று அடைந்துள்ளது.

இப்படி நிர்வாண சிற்பங்கள் எவ்வகையில் நோக்கினும் காண்போரை கவர்ந்திழுக்கிறதே தவிர,கருத்து செறிவை முன்னிருத்துகிறதே தவிர காம இச்சை தூண்டுவதாய் இல்லை.

நிர்வாணம் வளரும்..

ஜூலை 26, 2010 at 10:58 முப 5 பின்னூட்டங்கள்

நிர்வாணம்-2

William Adolphe Bouguereau (William Bouguereau) Le Ravissement de Psyche(1825-1905)
————————————————————————————————————————

ஓவியமும்,நிர்வாணமும்(ART)

நிர்வாணம் ஓவியத்தின் உயிர்,கலைத்துறையின் இலக்கணமாகிறது.ஓவியமொழியால் உச்சரிக்கப் படுகிறது.இத்துறையை பொறுத்தவரை “நிர்வாணம்” பொதுமொழி என்றே கருதப் படுகிறது.

காரணம்,நிர்வாணமான ஓர் உருவை படைத்து அதை என்னிறத்திற்கு அல்லது எந்த கலாசார உடைக்கு மாற்ற விரும்புகிறோமோ,அவ்வாறு மாற்றி வடிவைமைத் தோமானால்,அந்த கலாசாரத்திற்கும்(CULTURE ), நாகரிகத்திற்கும்(FASHION ),அவ்வுருவம் மாற்றம் பெரும்.

இவ்வாறு பார்க்கும் போது “நிர்வாண உருவம்”என்பது அனைத்து கலாச்சாரத்திற்கும்,இனங்களுக்கும் பொதுவானது என்பதும்,ஒரே நிலை ஓவிய உருவை நிறங்களையும்,கலாச்சார உடைகளையும் மாற்றி,மாற்றி வெவ்வேறு பண்பாட்டிற்கும்,பாரம்பரியத்திற்கும் மாற்றலாம் என்பதும் புலனாகிறது.

இதன் மூலம் ஓர் படைப்பு என்பது அதன் படைப்பியல்புகளுக்கு ஏற்ப பல்நிலை அடைதல் தெளிவாகிறது.

————————————————————————————————————————

நிர்வாணம்-கற்றலின் அவசியம்:

ஓர் ஓவியனுக்கு,மனித உடலியல் அதாவது உடலமைப்பு(ANATOMY )பற்றிய முழுமையான அறிவு அவசியமாகிறது.உடற்க் கூறுநிலை(PARTS OF BODY ) உடலமைப்பியலை நன்கு கற்று தெளிய,தவறின்றி ஓர் மனித உடலமைப்பு வரைய,”நிர்வாண ஓவியம்” வரைந்து தெளிதல் கட்டாயமாகிறது.

கற்றல் இல்லாமலும்,உடலமைப்பியல் பற்றிய முழுமையான அறிதலின்றியும்,ஓர் உருவை வரைய முயற்சிக்கும் போது தவறுகள் பல ஏற்ப்பட வாய்ப்புண்டு.

இயக்க ஓவியங்கள் (ANIMATION)போன்ற துறைகளுக்கும் உடலமைப்பு பற்றிய முழுமையான கற்றல் தேவைப் படுகின்றது.

————————————————————————————————————————

நிர்வாண ஓவியங்களின் தன்மை:

பல்வேறு ஓவியர்கள்,வரைந்த ஓவியங்கள்,காலத்தையும்(ஆதாம்,ஏவாள்)இடத்தின் தன்மையையும்,தேவையின் அவசியத்தையும்,அழகியல் உணர்வுகளையும்,வடிவமைப்பிற்கேற்ற தொகுப்புகளையும்(COMPOSITION )உள்ளடக்கிய நிலையிலேயே காணப்படுகிறது.அவை முற்றிலும் மனதை பாதிக்கின்ற,விரசமாக்குகிற,சபலம் தூண்டுகிற ரீதியில் உருவாக்கப் பட்டதாக தென்படவில்லை..தென்படுவதில்லை.

ஏதோ ஓர் முக்கிய தன்மையையும்,கலையுனர்வுகளைத் தூண்டும் மாசில்லாத அமைப்பையே தருகின்றன என்பது ஓவியத் துறை அல்லாத மற்றோரும் கூறும் கருத்தாகும்.

உண்மை நிர்வாணத்தை காண்கின்ற போது உளவியல் ரீதியான மன இறுக்கத்தை,சபலத்தை உண்டாக்கினும்,ஓர் ஓவியனின் படைப்பாக நிர்வாணம் பரிசளிக்கப் படும் போது எண்ணங்களை முற்றிலும் மாற்றி,ஓர் தெளிவான சிந்தனைக்கும்,காமம் கடந்த ரசனைக்கும்,வழிவகை செய்கிறது என்பது பார்வையாளனுக்கு புரியும்.

அதனால் தான் நிறுவனங்கள்,வீடுகள்,கலைக்கூடங்கள் மற்று ஓவியக் கண்காட்சிகள் என பொதுமக்கள் பெரும்பான்மையாக வருகின்ற இடங்களில் கூட,நிர்வாண ஓவியங்களை பேதமின்றி வைக்க இயல்கிறது.

அது ஓர் கட்டுப்பாட்டை கடந்தும் வாகை சூட முடிகிறது.

விரசங்களை தூண்டுவதாய் இருந்திருந்தால்,விதிகளுக்கு கட்டுப் பட்டதாய் இருந்திருக்கும்.நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும்.நாம் நினைக்கின்ற இடத்தில் நிலை நிமிர்த்தியிருக்க இயலாது.

அதே சமயத்தில் கலவி,காமம் பற்றிய நிகழ்வுகளைக்கூட ஓவியம் விரசமற்ற வீரியத்துடன் எடுத்தியம்புகிறது.

————————————————————————————————————————

ஓவியர்களின் வரிசை:

டா வின்சி(DA VINCI), ரெம்ப்ரன்ட்(REMBRANT) டிசியன்(TITIAN),ரூபன்ஸ்(RUBANS),டாலி(DOLLY ),ரெனையர்(RENOIR),ஆல்பர்ட் தியுரர்(ALBERT DURER ),பிக்காசோ(PICASSO),இங்க்ரேஸ்(INGRES),

என உலகப் புகழ் பெற்ற ஓவிய மேதைகளின் வரலாற்றை திரும்பி,பார்க்கின்றபோது பெரும்பாலான ஓவியர்கள் நிர்வாணத்தை முக்கிய நிலையாக வைத்து வரைந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது(உதாரணமாக ஆதாம்,ஏவாள் காலத்தை நிர்வாணமாகத்தானே வரைய இயலும்).

அதனை ஆய்ந்து பார்த்தோமானால்,அழகியல் உணர்வுகளே தெரிகிறது..ஆபாசம் தெரிவதில்லை.

Picture courtesy: http://www.artrenewal.org/pages/artwork.php?artworkid=23&size=large

(ஆடை அவிழும்.. )

ஓவியமும்,நிர்வாணமும்(ART)

———————————————-

நிர்வாணம் ஓவியத்தின் உயிர்,கலைத்துறையின் இலக்கணமாகிறது.ஓவியமொழியால் உச்சரிக்கப் படுகிறது.இத்துறையை பொறுத்தவரை “நிர்வாணம்” பொதுமொழி என்றே கருதப் படுகிறது.

காரணம்,நிர்வாணமான ஓர் உருவை படைத்து அதை என்னிறத்திற்கு அல்லது எந்த கலாசார உடைக்கு மாற்ற விரும்புகிறோமோ,அவ்வாறு மாற்றி வடிவைமைத் தோமானால்,அந்த கலாசாரத்திற்கும்(CULTURE ), நாகரிகத்திற்கும்(FASHION ),அவ்வுருவம் மாற்றம் பெரும்.

இவ்வாறு பார்க்கும் போது “நிர்வாண உருவம்”என்பது அனைத்து கலாச்சாரத்திற்கும்,இனங்களுக்கும் பொதுவானது என்பதும்,ஒரே நிலை ஓவிய உருவை நிறங்களையும்,கலாச்சார உடைகளையும் மாற்றி,மாற்றி வெவ்வேறு பண்பாட்டிற்கும்,பாரம்பரியத்திற்கும் மாற்றலாம் என்பதும் புலனாகிறது.

இதன் மூலம் ஓர் படைப்பு என்பது அதன் படைப்பியல்புகளுக்கு ஏற்ப பல்நிலை அடைதல் தெளிவாகிறது.

நிர்வாணம்-கற்றலின் அவசியம்:

————————————————

ஓர் ஓவியனுக்கு,மனித உடலியல் அதாவது உடலமைப்பு(ANATOMY )பற்றிய முழுமையான அறிவு அவசியமாகிறது.உடற்க் கூறுநிலை(PARTS OF BODY )

உடலமைப்பியலை நன்கு கற்று தெளிய,தவறின்றி ஓர் மனித உடலமைப்பு வரைய,”நிர்வாண ஓவியம்” வரைந்து தெளிதல் கட்டாயமாகிறது.

கற்றல் இல்லாமலும்,உடலமைப்பியல் பற்றிய முழுமையான அறிதலின்றியும்,ஓர் உருவை வரைய முயற்சிக்கும் போது தவறுகள் பல ஏற்ப்பட வாய்ப்புண்டு.

இயக்க ஓவியங்கள் (ANIMATION)போன்ற துறைகளுக்கும் உடலமைப்பு பற்றிய முழுமையான கற்றல் தேவைப் படுகின்றது.

நிர்வாண ஓவியங்களின் தன்மை:

பல்வேறு ஓவியர்கள்,வரைந்த ஓவியங்கள்,காலத்தையும்(ஆதாம்,ஏவாள்)இடத்தின் தன்மையையும்,தேவையின் அவசியத்தையும்,அழகியல் உணர்வுகளையும்,வடிவமைப்பிற்கேற்ற தொகுப்புகளையும்(COMPOSITION )உள்ளடக்கிய நிலையிலேயே காணப்படுகிறது.அவை முற்றிலும் மனதை பாதிக்கின்ற,விரசமாக்குகிற,சபலம் தூண்டுகிற ரீதியில் உருவாக்கப் பட்டதாக தென்படவில்லை..தென்படுவதில்லை.

ஏதோ ஓர் முக்கிய தன்மையையும்,கலையுனர்வுகளைத் தூண்டும் மாசில்லாத அமைப்பையே தருகின்றன என்பது ஓவியத் துறை அல்லாத மற்றோரும் கூறும் கருத்தாகும்.

உண்மை நிர்வாணத்தை காண்கின்ற போது உளவியல் ரீதியான மன இறுக்கத்தை,சபலத்தை உண்டாக்கினும்,ஓர் ஓவியனின் படைப்பாக நிர்வாணம் பரிசளிக்கப் படும் போது எண்ணங்களை முற்றிலும் மாற்றி,ஓர் தெளிவான சிந்தனைக்கும்,காமம் கடந்த ரசனைக்கும்,வழிவகை செய்கிறது என்பது பார்வையாளனுக்கு புரியும்.

அதனால் தான் நிறுவனங்கள்,வீடுகள்,கலைக்கூடங்கள் மற்று ஓவியக் கண்காட்சிகள் என பொதுமக்கள் பெரும்பான்மையாக வருகின்ற இடங்களில் கூட,நிர்வாண ஓவியங்களை பேதமின்றி வைக்க இயல்கிறது.

அது ஓர் கட்டுப்பாட்டை கடந்தும் வாகை சூட முடிகிறது.

விரசங்களை தூண்டுவதாய் இருந்திருந்தால்,விதிகளுக்கு கட்டுப் பட்டதாய் இருந்திருக்கும்.நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும்.நாம் நினைக்கின்ற இடத்தில் நிலை நிமிர்த்தியிருக்க இயலாது.

அதே சமயத்தில் கலவி,காமம் பற்றிய நிகழ்வுகளைக்கூட ஓவியம் விரசமற்ற வீரியத்துடன் எடுத்தியம்புகிறது.

ஓவியர்களின் வரிசை:

டா வின்சி(DA VINCI), ரெம்ப்ரன்ட் (ரெம்ப்ரன்ட்),இங்க்ரேஸ்(INGRES),டிசியன்(TITIAN),ரூபன்ஸ்(RUBANS),டாலி(DOLLY ),ரெனையர்(RENOIR),ஆல்பர்ட் தியுரர்(ALBERT DURER ),பிக்காசோ(PICASSO )

என உலகப் புகழ் பெற்ற ஓவிய மேதைகளின் வரலாற்றை திரும்பி,பார்க்கின்றபோது பெரும்பாலான ஓவியர்கள் நிர்வாணத்தை முக்கிய நிலையாக வைத்து வரைந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது(உதாரணமாக ஆதாம்,ஏவாள் காலத்தை நிர்வாணமாகத்தானே வரைய இயலும்).

அதனை ஆய்ந்து பார்த்தோமானால்,அழகியல் உணர்வுகளே தெரிகிறது..ஆபாசம் தெரிவதில்லை.

ஜூலை 20, 2010 at 10:46 முப 2 பின்னூட்டங்கள்

நிர்வாணம் 1

————————————————————————————————————————–

கவின்கலைக் கல்லூரி,2003 ஆம்  ஆண்டு,என் மாணவப் பருவத்தில்..நான் எழுதிய திறனாய்வு “நிர்வாணம்”,நிர்வாணம் குறித்த எனது பார்வை,ஓவியம் மற்றும் இதரத்துறைகளுடன் ஓர் அலசல்….இங்கு உங்களின் பார்வைக்கும் தொடராய்…

————————————————————————————————————————–


  • எனை(க்)

கரு சுமந்து

உரு கொடுத்து

‘உயிரோவியம்’ ஈன்ற

முதல் கலைஞர்களான

தாய் தந்தைக்கு..

————————————————-

  • சிகரமேற்ற முனையும்

சித்தப்பாக்கள்,சித்திகள்

அத்தைகள்,மாமா

அனைவர்க்கும்.

————————————————-

  • மாசடைந்த மனதில்

அறியாமை ஆடைகளைந்து

என் எண்ணத்தை

‘நிர்வாணம்‘ ஆக்கிய

கல்லூரிக்கும்..

————————————————-

  • துரும்பாய் இருந்தவனை

தூணாக்க

தோள்தந்து,துணை நின்ற

தோழமைக்கும்,மற்றோருக்கும்..

————————————————-

  • நான் கல்லூரியில்

கால் வைக்க

களம் அமைத்தவர்

எனை “அடையாளம்” காட்டிய

அன்பர்

நண்பர்(எம்)கனேஷ் அவர்களுக்கும்..

————————————————-

  • என் அறிவுக்கண் திறந்த

எம் கலைத்தொழில் கல்லூரி

ஆசான்களுக்கும்

நன்றிகள் பல! பல!

————————————————-

சமர்ப்பணம்

என் எண்ணங்களை

வண்ணங்களாய் சுமந்து

நான் விழுதூன்ற

மரமாய் நின்று

இவ்விதைக்குள் விருட்சம் தந்து

விழுந்துவிட்ட

என் கண்(ணன்)

பாக்கியநாதன் (சித்தப்பா)

பாதம் பணிந்து.

——————————————————————————————————-

* நிர்வாணம்-அறிமுகம்

Ingres-Jean-Auguste

பிறந்தமேனியாய்,ஆடைகளைந்து,செயற்கைகளுக்கு இடம் தராது,இயற்கையாய் ஆதியை அறிமுகப்படுத்தும் நிலை “நிர்வாணம்’ ஆகின்றது.

அழகியலான,இயல்பான உடலமைப்பை அப்படியேக் காணல்,உடையற்ற உடல் என்பது பொருந்தும்.

நிர்வாணமும்,பயன்பாடுகளும்: பல்துறைபயன்பாடுகளாய்,ஓவியம்,சிற்பம்,மருத்துவம்,புகைப்படம்,திரைப்படம்,விளம்பரம் என வேரூன்றி கிளைப்பரப்பி உள்ளது.எல்லாத்துறைக்கும் முக்கியமாய்,தேவையின் அவசியமாய் பல இடங்களில் பயன்படுதல்,நாம் கண்கூட காண்பதே!

அறவே தேவையில்லை,எனவும் அறுதியிட்டுக் கூற யாரும் முன் வருவாறில்லை.ஏனெனில் காலத்தின் கட்டாயமும்,அவசியத்தையும்,தொழில்துறையின் தேவையையும் அது தன்னகப் படுத்தியுள்ளது..

-ஆடை அவிழும்…

Picture courtesy: http://www.2artgallery.com/gallery/images/Ingres-Jean-Auguste.jpg

ஜூலை 14, 2010 at 10:35 முப 3 பின்னூட்டங்கள்

Newer Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,597 hits