Posts filed under ‘நாலாவது கண்’
நீயா?நானா?முட்டி மோதிக் கொள்ளும் ரெட்டை ஜீவிகள்..
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
காலைக் கட்டிப் போட்டு
தன்னைக்
காப்பாற்றிக் கொள்கிறது
ஆறாம் அறிவு!
மேக் அப் (ஆடை போட்ட ஆடு)
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
நேரத்திற்கோர் நிறம்
மாறும்
சுயநல மனிதர்களே!
என்னையும்
நிறமாற்றி என்ன
செய்ய
போகின்றீர்??
தலைக்கவசம் அணிவீர்!!(wear helmet)
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
சிதையாமல்
மீதமிருப்பது
-இந்த சிலையில்
அந்த தலை
மட்டும்தான்.
இவன்தான் கடவுள்
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
- மனிதனை படைப்பவன்
பிரம்மா
அப்போ..கடவுளைப்
படைப்பவன்!!
- இல்லாதக் கடவுளுக்காய்
இங்கே
சில்லறைகள் விழும்.
- தள்ளாத வயதும்
இயலாமையும்
இரண்டறக் கலந்து
இருக்கும்
இவனுக்காய் அல்ல!!











