தமிழ் அழுகிறாள்..தரங்கெட்ட தமிழர்க்கு தாயாகி விட்டோமென்று.
ஏப்ரல் 24, 2010 at 8:06 பிப பின்னூட்டமொன்றை இடுக
நானறியா காலம்
—————————–
என் மூதாதையர்
மொழிந்ததால்-தமிழ்
எனக்கு மொழி.
என் இனம்
பேசியதால்-இனத்தால்
நான் தமிழன்.
புத்தகங்களும்,எழுத்துக்களும்
எனக்கு போதித்தது-தமிழ்
எனக்குத் தாய்.
வள்ளுவன் எனக்கு
வழிகாட்டி.
அகர முதல என்
ஆரம்பம்.
எழுத்தாணி எம்மின
ஆயுதம்.
நானறிந்த காலம்
——————————
போர்ப்படை உடையில்
புலியென நடையில்
தலைவன் வந்தான்.
தமிழ் வாழ்ந்தது.
எம் தலைவன் கையில்
எழுத்தாணி கண்டேன்
துப்பாக்கி வடிவில்..
புறநானூறு தெரிந்தது.
தமிழ்மொழி தன்பெயரை
உருமாற்றி
பிரபாகரன் என
பெயர்மாற்றம் கண்டது.
தமிழ் அதனாலே-
பெருமை கொண்டது.
தமிழ்மகனை ஈன்றெடுத்த
தமிழ்த்தாய் பார்வதியை
வந்தாரை வாழ்விக்குமாமே
தமிழ்நாடு-விரட்டி
சாதனை கண்டது.
தமிழின் பெயர் சொல்லி
தரங்கெட்டு உயிர்வாழும்
நயவஞ்சக கூட்டமெல்லாம்
தமிழ் வாழ்க!!தமிழ்வாழ்க!!
கோசம் எழுப்பி
குளிர்காய
தமிழ் தலைக்கவிழ்ந்து
அழுகிறாள்-தரங்கெட்ட தமிழர்க்கு
தாயாகி விட்டோமென்று.
Entry filed under: குமுறல். Tags: தமிழினம், தமிழ், தேசியத்தலைவன், நாம் தமிழர், பார்வதி, பார்வதி அம்மாள், பிரபாகரன், மொழி, விடுதலைப்புலிகள், வெற்றி.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed