நிர்வாணம்-2
ஜூலை 20, 2010 at 10:46 முப 2 பின்னூட்டங்கள்
William Adolphe Bouguereau (William Bouguereau) Le Ravissement de Psyche(1825-1905) ————————————————————————————————————————
ஓவியமும்,நிர்வாணமும்(ART)
நிர்வாணம் ஓவியத்தின் உயிர்,கலைத்துறையின் இலக்கணமாகிறது.ஓவியமொழியால் உச்சரிக்கப் படுகிறது.இத்துறையை பொறுத்தவரை “நிர்வாணம்” பொதுமொழி என்றே கருதப் படுகிறது.
காரணம்,நிர்வாணமான ஓர் உருவை படைத்து அதை என்னிறத்திற்கு அல்லது எந்த கலாசார உடைக்கு மாற்ற விரும்புகிறோமோ,அவ்வாறு மாற்றி வடிவைமைத் தோமானால்,அந்த கலாசாரத்திற்கும்(CULTURE ), நாகரிகத்திற்கும்(FASHION ),அவ்வுருவம் மாற்றம் பெரும்.
இவ்வாறு பார்க்கும் போது “நிர்வாண உருவம்”என்பது அனைத்து கலாச்சாரத்திற்கும்,இனங்களுக்கும் பொதுவானது என்பதும்,ஒரே நிலை ஓவிய உருவை நிறங்களையும்,கலாச்சார உடைகளையும் மாற்றி,மாற்றி வெவ்வேறு பண்பாட்டிற்கும்,பாரம்பரியத்திற்கும் மாற்றலாம் என்பதும் புலனாகிறது.
இதன் மூலம் ஓர் படைப்பு என்பது அதன் படைப்பியல்புகளுக்கு ஏற்ப பல்நிலை அடைதல் தெளிவாகிறது.
————————————————————————————————————————
நிர்வாணம்-கற்றலின் அவசியம்:
ஓர் ஓவியனுக்கு,மனித உடலியல் அதாவது உடலமைப்பு(ANATOMY )பற்றிய முழுமையான அறிவு அவசியமாகிறது.உடற்க் கூறுநிலை(PARTS OF BODY ) உடலமைப்பியலை நன்கு கற்று தெளிய,தவறின்றி ஓர் மனித உடலமைப்பு வரைய,”நிர்வாண ஓவியம்” வரைந்து தெளிதல் கட்டாயமாகிறது.
கற்றல் இல்லாமலும்,உடலமைப்பியல் பற்றிய முழுமையான அறிதலின்றியும்,ஓர் உருவை வரைய முயற்சிக்கும் போது தவறுகள் பல ஏற்ப்பட வாய்ப்புண்டு.
இயக்க ஓவியங்கள் (ANIMATION)போன்ற துறைகளுக்கும் உடலமைப்பு பற்றிய முழுமையான கற்றல் தேவைப் படுகின்றது.
————————————————————————————————————————
நிர்வாண ஓவியங்களின் தன்மை:
பல்வேறு ஓவியர்கள்,வரைந்த ஓவியங்கள்,காலத்தையும்(ஆதாம்,ஏவாள்)இடத்தின் தன்மையையும்,தேவையின் அவசியத்தையும்,அழகியல் உணர்வுகளையும்,வடிவமைப்பிற்கேற்ற தொகுப்புகளையும்(COMPOSITION )உள்ளடக்கிய நிலையிலேயே காணப்படுகிறது.அவை முற்றிலும் மனதை பாதிக்கின்ற,விரசமாக்குகிற,சபலம் தூண்டுகிற ரீதியில் உருவாக்கப் பட்டதாக தென்படவில்லை..தென்படுவதில்லை.
ஏதோ ஓர் முக்கிய தன்மையையும்,கலையுனர்வுகளைத் தூண்டும் மாசில்லாத அமைப்பையே தருகின்றன என்பது ஓவியத் துறை அல்லாத மற்றோரும் கூறும் கருத்தாகும்.
உண்மை நிர்வாணத்தை காண்கின்ற போது உளவியல் ரீதியான மன இறுக்கத்தை,சபலத்தை உண்டாக்கினும்,ஓர் ஓவியனின் படைப்பாக நிர்வாணம் பரிசளிக்கப் படும் போது எண்ணங்களை முற்றிலும் மாற்றி,ஓர் தெளிவான சிந்தனைக்கும்,காமம் கடந்த ரசனைக்கும்,வழிவகை செய்கிறது என்பது பார்வையாளனுக்கு புரியும்.
அதனால் தான் நிறுவனங்கள்,வீடுகள்,கலைக்கூடங்கள் மற்று ஓவியக் கண்காட்சிகள் என பொதுமக்கள் பெரும்பான்மையாக வருகின்ற இடங்களில் கூட,நிர்வாண ஓவியங்களை பேதமின்றி வைக்க இயல்கிறது.
அது ஓர் கட்டுப்பாட்டை கடந்தும் வாகை சூட முடிகிறது.
விரசங்களை தூண்டுவதாய் இருந்திருந்தால்,விதிகளுக்கு கட்டுப் பட்டதாய் இருந்திருக்கும்.நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும்.நாம் நினைக்கின்ற இடத்தில் நிலை நிமிர்த்தியிருக்க இயலாது.
அதே சமயத்தில் கலவி,காமம் பற்றிய நிகழ்வுகளைக்கூட ஓவியம் விரசமற்ற வீரியத்துடன் எடுத்தியம்புகிறது.
————————————————————————————————————————
ஓவியர்களின் வரிசை:
டா வின்சி(DA VINCI), ரெம்ப்ரன்ட்(REMBRANT) டிசியன்(TITIAN),ரூபன்ஸ்(RUBANS),டாலி(DOLLY ),ரெனையர்(RENOIR),ஆல்பர்ட் தியுரர்(ALBERT DURER ),பிக்காசோ(PICASSO),இங்க்ரேஸ்(INGRES),
என உலகப் புகழ் பெற்ற ஓவிய மேதைகளின் வரலாற்றை திரும்பி,பார்க்கின்றபோது பெரும்பாலான ஓவியர்கள் நிர்வாணத்தை முக்கிய நிலையாக வைத்து வரைந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது(உதாரணமாக ஆதாம்,ஏவாள் காலத்தை நிர்வாணமாகத்தானே வரைய இயலும்).
அதனை ஆய்ந்து பார்த்தோமானால்,அழகியல் உணர்வுகளே தெரிகிறது..ஆபாசம் தெரிவதில்லை.
Picture courtesy: http://www.artrenewal.org/pages/artwork.php?artworkid=23&size=large
(ஆடை அவிழும்.. )
ஓவியமும்,நிர்வாணமும்(ART)
———————————————-
நிர்வாணம் ஓவியத்தின் உயிர்,கலைத்துறையின் இலக்கணமாகிறது.ஓவியமொழியால் உச்சரிக்கப் படுகிறது.இத்துறையை பொறுத்தவரை “நிர்வாணம்” பொதுமொழி என்றே கருதப் படுகிறது.
காரணம்,நிர்வாணமான ஓர் உருவை படைத்து அதை என்னிறத்திற்கு அல்லது எந்த கலாசார உடைக்கு மாற்ற விரும்புகிறோமோ,அவ்வாறு மாற்றி வடிவைமைத் தோமானால்,அந்த கலாசாரத்திற்கும்(CULTURE ), நாகரிகத்திற்கும்(FASHION ),அவ்வுருவம் மாற்றம் பெரும்.
இவ்வாறு பார்க்கும் போது “நிர்வாண உருவம்”என்பது அனைத்து கலாச்சாரத்திற்கும்,இனங்களுக்கும் பொதுவானது என்பதும்,ஒரே நிலை ஓவிய உருவை நிறங்களையும்,கலாச்சார உடைகளையும் மாற்றி,மாற்றி வெவ்வேறு பண்பாட்டிற்கும்,பாரம்பரியத்திற்கும் மாற்றலாம் என்பதும் புலனாகிறது.
இதன் மூலம் ஓர் படைப்பு என்பது அதன் படைப்பியல்புகளுக்கு ஏற்ப பல்நிலை அடைதல் தெளிவாகிறது.
நிர்வாணம்-கற்றலின் அவசியம்:
————————————————
ஓர் ஓவியனுக்கு,மனித உடலியல் அதாவது உடலமைப்பு(ANATOMY )பற்றிய முழுமையான அறிவு அவசியமாகிறது.உடற்க் கூறுநிலை(PARTS OF BODY )
உடலமைப்பியலை நன்கு கற்று தெளிய,தவறின்றி ஓர் மனித உடலமைப்பு வரைய,”நிர்வாண ஓவியம்” வரைந்து தெளிதல் கட்டாயமாகிறது.
கற்றல் இல்லாமலும்,உடலமைப்பியல் பற்றிய முழுமையான அறிதலின்றியும்,ஓர் உருவை வரைய முயற்சிக்கும் போது தவறுகள் பல ஏற்ப்பட வாய்ப்புண்டு.
இயக்க ஓவியங்கள் (ANIMATION)போன்ற துறைகளுக்கும் உடலமைப்பு பற்றிய முழுமையான கற்றல் தேவைப் படுகின்றது.
நிர்வாண ஓவியங்களின் தன்மை:
பல்வேறு ஓவியர்கள்,வரைந்த ஓவியங்கள்,காலத்தையும்(ஆதாம்,ஏவாள்)இடத்தின் தன்மையையும்,தேவையின் அவசியத்தையும்,அழகியல் உணர்வுகளையும்,வடிவமைப்பிற்கேற்ற தொகுப்புகளையும்(COMPOSITION )உள்ளடக்கிய நிலையிலேயே காணப்படுகிறது.அவை முற்றிலும் மனதை பாதிக்கின்ற,விரசமாக்குகிற,சபலம் தூண்டுகிற ரீதியில் உருவாக்கப் பட்டதாக தென்படவில்லை..தென்படுவதில்லை.
ஏதோ ஓர் முக்கிய தன்மையையும்,கலையுனர்வுகளைத் தூண்டும் மாசில்லாத அமைப்பையே தருகின்றன என்பது ஓவியத் துறை அல்லாத மற்றோரும் கூறும் கருத்தாகும்.
உண்மை நிர்வாணத்தை காண்கின்ற போது உளவியல் ரீதியான மன இறுக்கத்தை,சபலத்தை உண்டாக்கினும்,ஓர் ஓவியனின் படைப்பாக நிர்வாணம் பரிசளிக்கப் படும் போது எண்ணங்களை முற்றிலும் மாற்றி,ஓர் தெளிவான சிந்தனைக்கும்,காமம் கடந்த ரசனைக்கும்,வழிவகை செய்கிறது என்பது பார்வையாளனுக்கு புரியும்.
அதனால் தான் நிறுவனங்கள்,வீடுகள்,கலைக்கூடங்கள் மற்று ஓவியக் கண்காட்சிகள் என பொதுமக்கள் பெரும்பான்மையாக வருகின்ற இடங்களில் கூட,நிர்வாண ஓவியங்களை பேதமின்றி வைக்க இயல்கிறது.
அது ஓர் கட்டுப்பாட்டை கடந்தும் வாகை சூட முடிகிறது.
விரசங்களை தூண்டுவதாய் இருந்திருந்தால்,விதிகளுக்கு கட்டுப் பட்டதாய் இருந்திருக்கும்.நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும்.நாம் நினைக்கின்ற இடத்தில் நிலை நிமிர்த்தியிருக்க இயலாது.
அதே சமயத்தில் கலவி,காமம் பற்றிய நிகழ்வுகளைக்கூட ஓவியம் விரசமற்ற வீரியத்துடன் எடுத்தியம்புகிறது.
ஓவியர்களின் வரிசை:
டா வின்சி(DA VINCI), ரெம்ப்ரன்ட் (ரெம்ப்ரன்ட்),இங்க்ரேஸ்(INGRES),டிசியன்(TITIAN),ரூபன்ஸ்(RUBANS),டாலி(DOLLY ),ரெனையர்(RENOIR),ஆல்பர்ட் தியுரர்(ALBERT DURER ),பிக்காசோ(PICASSO )
என உலகப் புகழ் பெற்ற ஓவிய மேதைகளின் வரலாற்றை திரும்பி,பார்க்கின்றபோது பெரும்பாலான ஓவியர்கள் நிர்வாணத்தை முக்கிய நிலையாக வைத்து வரைந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது(உதாரணமாக ஆதாம்,ஏவாள் காலத்தை நிர்வாணமாகத்தானே வரைய இயலும்).
அதனை ஆய்ந்து பார்த்தோமானால்,அழகியல் உணர்வுகளே தெரிகிறது..ஆபாசம் தெரிவதில்லை.
Entry filed under: என் கலைப்பயணம், நிர்வாணம். Tags: அம்மனம், நிர்வாணம், female model, MODEL LADY, NUDE, NUDE GIRL.
2 பின்னூட்டங்கள் Add your own
adhithakarikalan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. adhithakarikalan | 11:41 முப இல் ஜூலை 20, 2010
மீண்டும் அவிழும் வரை காத்திருக்கிறேன்…
2. படைப்பாளி | 11:57 முப இல் ஜூலை 20, 2010
ஹ..ஹா..