அனிச்சை செயலாகி விட்டது,காதல் கவிதைகளும்,அவள் முகமும்..
நவம்பர் 14, 2010 at 10:23 முப 17 பின்னூட்டங்கள்
இயல்பாகவே காதலுக்கும்,இல்லை காதல் கவிதைகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரமாகத்தான் இருந்தது.பள்ளிப்பருவத்தில் பசங்க ,அந்த பதின்ம வயதை அடைந்தவுடன் கிறுக்கும் கிறுக்கல்களில் அதிகம் தென்படுவது காதலாகத்தான் இருக்கும்.அரும்பும் மீசையுடன் ஆசையும்,காதலும்,காதல் கவிதைகளும் அரும்பிக்கொண்டிருக்கும்.
அப்போவே காதலின் பக்கம் எனக்கு மட்டுமான ஓர் கசப்பு இருந்தது.மேலும் என்னை தனிமைப் படுத்திக் காட்டிக் கொள்வதற்காக சமுதாய சிந்தனை என்றப் பெயரில் ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.மறந்தும் கூட வரையத் தெரிந்தும் பெண்ணின் முகத்தை வரைவதில்லை என்று எமக்குள் ஓர் ஏமாற்று வரையறை வேறு வகுத்து வைத்திருந்தேன்.
மச்சி என்னோட ஆள் போட்டோவ வரைஞ்சி கொடுடா..ப்ளீஸ்..என்ற எத்தனையோ நண்பர்களின் வற்ப்புறுத்தல் களில் கூட ,நெ(கொ)ஞ்சம் தளராமல் முடியாது,எனது கொள்கையில் தளர மாட்டேன் என முரண்பாடு கொண்டவனாகத்தான் இருந்தேன்.
ஆனால்..இப்போ எனது வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசிக்கும் அன்புள்ளங்கள்,நண்பர்கள், நண்பா கொஞ்சம் காதலையும்,கன்னியையும் தாண்டி யோசியுங்களேன் என்று கூறுகிறார்கள்.
அந்த அளவுக்கு காதல் காலம் கடந்து என்னுள் களம் கண்டிருக்கிறது..(பள்ளிப் பருவத்தில் படம் வரைந்துக் கொடுக்க சொன்ன நண்பர்கள் படித்தால் என்னை எதைக் கொண்டு அடிப்பார்கள் என சொல்ல முடியாது).
நானும் யோசிக்கிறேன் தான்.அப்பப்போ சமுதாயம் வருகிறது.அதிகமாக காதலே வருகிறது.வரவேண்டிய வயதில் வறட்டு கௌரவத்தில் வராதது.இப்போ வந்து தொலைக்கிறது.வரைய நினைக்கையில் என்னை கேட்காமலே என் கை அவள் முகத்தை வரைந்து முடித்திருக்கிறது.அனிச்சை செயலாகி விட்டது ,காதல் கவிதைகளும்,அவள் முகமும் என் மூளைக்கும்,கைகளுக்கும்..
பதின்ம வயதில் வரவேண்டியது,பத்து ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறது,உடலுக்கு வயதாகிக் கொண்டே போகிறது..சரி மனதாவது இளமையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்றுதான் மூளைக்கும்,கைகளுக்கும் இப்போ நான் கட்டுப்பாடு போடுவதே இல்லை!
Entry filed under: குறிப்புகள்.
17 பின்னூட்டங்கள் Add your own
adhithakarikalan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. அன்பரசன் | 11:35 முப இல் நவம்பர் 14, 2010
//அப்போவே காதலின் பக்கம் எனக்கு மட்டுமான ஓர் கசப்பு இருந்தது//
//அந்த அளவுக்கு காதல் காலம் கடந்து என்னுள் களம் கண்டிருக்கிறது//
//வரவேண்டிய வயதில் வறட்டு கௌரவத்தில் வராதது.இப்போ வந்து தொலைக்கிறது//
நானும் உங்க ரகம்தான் நண்பா.
2. படைப்பாளி | 8:57 பிப இல் நவம்பர் 14, 2010
ஆஹா..கூட்டணிக்கு ஆள் இருக்குப்பா!!
3. Adaleru | 11:39 முப இல் நவம்பர் 14, 2010
//சரி மனதாவது இளமையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்றுதான் மூளைக்கும்,கைகளுக்கும் இப்போ நான் கட்டுப்பாடு போடுவதே இல்லை//
I enjoyed this lined bala. but dont say that u become aged. we are still young. love the lines. keep writing bala
4. படைப்பாளி | 8:57 பிப இல் நவம்பர் 14, 2010
thank you…nanbendaa!!
5. s.kumar | 11:55 முப இல் நவம்பர் 14, 2010
அழகான படம்… உங்கள் பகிர்வும் அருமை…
விட்டு விட்டுப் போங்கள் காதல்தானே வருகிறது… பரவாயில்லை..
6. படைப்பாளி | 8:58 பிப இல் நவம்பர் 14, 2010
நன்றி..அப்போ காதலை தொடர்கிறேன் நண்பரே..
7. எஸ். கே | 12:15 பிப இல் நவம்பர் 14, 2010
அழகான படம்! மிக நன்றாக உள்ளது பதிவு!
8. படைப்பாளி | 8:59 பிப இல் நவம்பர் 14, 2010
மிக்க நன்றி நண்பரே!
9. HARESH NARAYAN | 1:24 பிப இல் நவம்பர் 14, 2010
அருமை..!
–
DREAMER
10. படைப்பாளி | 8:59 பிப இல் நவம்பர் 14, 2010
மிக்க நன்றி நண்பரே..
11. nis | 2:41 பிப இல் நவம்பர் 14, 2010
நல்ல பதிவு
super
12. படைப்பாளி | 9:00 பிப இல் நவம்பர் 14, 2010
மிக்க நன்றி நண்பரே..!
13. Niranjan | 2:30 முப இல் நவம்பர் 15, 2010
i like very much……
14. படைப்பாளி | 7:31 முப இல் நவம்பர் 15, 2010
thank you very much….friend.
15. அன்பு | 3:38 பிப இல் நவம்பர் 15, 2010
// வரவேண்டிய வயதில் வறட்டு கௌரவத்தில் வராதது.இப்போ வந்து தொலைக்கிறது //
better late than never.. ஃப்ரீயா விடுங்க.. உங்களை மாதிரி பல பேர் இருக்கோம்.. 🙂
16. படைப்பாளி | 5:25 பிப இல் நவம்பர் 15, 2010
கூட்டணி பலமா இருக்கு..கவலையில்லை
17. adhithakarikalan | 10:48 முப இல் நவம்பர் 18, 2010
காதலை தவிர்த்துப் பார்த்தால் வாழ்க்கை வெறுமை நண்பா….