அவன்.. இவன்..
ஜூன் 17, 2011 at 11:57 முப 14 பின்னூட்டங்கள்
- அன்றைக்கு ஆண்டை வீட்டின்
கொத்தடிமையாய்
அவன்!
- இன்றைக்கு கல்வியறிவில்
மிக உயர்ந்து மதிப்புமிக்கவனாய்
சமுதாயத்தில் அவன் மகன்
இவன்!
- அன்றைக்கு சேரிக்காரன்
என்று
ஒதுக்கப்படவனாய்
அவன்!
- இன்றைக்கு சேற்றில்
பிறந்த செந்தாமரையாய்
ஒளிமிக்க இவன்!
- அன்றைக்கு அவன் அப்பனை
அடேய் என்றழைத்தான்
உயர்குலத்தான் என்கிற
அவன்!
- இன்றைக்கு அவன் மகனை
வாய்விட்டு வராத வார்த்தைகளால்
சார் என்கிறான் அவனே
இவன்!
- பணம் இருக்கிறது
படிப்பறிவில் உயர்ந்து விட்டான்
சாதி அழிந்துவிட்டது என்கிறான்
அவன்!
- தகுதியில் உயர்ந்தபின்னும்
தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்
இழிகுலத்தான் என்று சொல்லி
கொலைவெறியில்
இவன்!
- தாழ்த்தப்படவன் என்றறிந்தும்
படிக்கும் போது
“மச்சி “என்று
நட்பு பாராட்டியவன்
அவன்!
- தன் குலப்பெண்ணை
காதல் கொண்டான் என்பதற்காய்
கீழ்சாதிக்கார நாய்
என்கிறான் இப்போ
இவன்!
- பள்ளியில் படிக்கிறான்
அவனும் இவனும்
ஒன்றாய்..
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’
Entry filed under: கவிதைகள். Tags: அவன் இவன், இழிநிலை, இழிவு, ஒற்றை டம்ளர் முறை, கொடுமை, கொலை, கொலைவெறி, கொள்ளை, சமுதாயம், சாதி, சாதிக்கொடுமை, சாதிவெறி, ஜாதி, ஜாதிச்சண்டை, தீண்டாமை, பகுத்தறிவு, படம், பாடம்.
14 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. sakthivel | 12:19 பிப இல் ஜூன் 17, 2011
பாராட்டுக்குரியது…
உமது
காலத்திற்கு ஏற்ப பரையேற்றுதல்
தன்மை…
2. படைப்பாளி | 12:40 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி நண்பரே!
3. suganthiny | 1:20 பிப இல் ஜூன் 17, 2011
தங்களின் அவன் இவன் என்ற கவிதை படித்தேன் நன்றாக இருந்திச்சு.
தகுதியில் உயர்ந்தபின்னும்
தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்
இழிகுலத்தான் என்று சொல்லி
கொலைவெறியில்
இவன்! என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.
4. படைப்பாளி | 2:31 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி தோழி!
5. padmahari | 1:44 பிப இல் ஜூன் 17, 2011
பிரமாதம் நண்பா…..
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்!
6. படைப்பாளி | 2:40 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி நண்பரே!!…
7. Siva Prabu | 2:45 பிப இல் ஜூன் 17, 2011
மிக அருமையான கவிதை
8. படைப்பாளி | 3:10 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி நண்பரே!….
9. THIRUMAVALAVAN R | 5:29 பிப இல் ஜூன் 17, 2011
அவன், இவன் கவிதையெல்லாம் ஒ.கே நண்பா… அந்த அவன், இவன் யாருன்னு நீ கடைசி வரை சொல்லவே இல்லையே??? கவிதை நல்லா இருந்தாலும் இப்படியெல்லாம் கேள்விக் கேட்போம்…..
10. படைப்பாளி | 8:54 முப இல் ஜூன் 18, 2011
ஹா…ஹா…ஆமாம் யாரு நண்பா.. அந்த அவன் இவன்..
11. மதுரை சரவணன் | 11:53 பிப இல் ஜூன் 17, 2011
avan ivan nanraaka errath thaalvinai padam pidiththuk kaattukirathu… vaalththukkal
12. படைப்பாளி | 8:55 முப இல் ஜூன் 18, 2011
மிக்க நன்றி நண்பரே
13. rathnavel natarajan | 2:56 பிப இல் ஜூன் 18, 2011
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
14. jsree | 6:41 பிப இல் ஜூன் 18, 2011
avan evan cute natuarl realistic…manithanin vazhkai tharam marinalum, ego maruvathillai…