அருகாமையில் நீயிருந்தால்!
ஓகஸ்ட் 1, 2011 at 11:59 முப 3 பின்னூட்டங்கள்
அருகாமையில் நீயிருந்தால்
அகிலம் கூட
சிறிதாகிறது!
சோகம் எமை சூழ்ந்தபோதும்
உம் தோள்சாய
எல்லாமே சுகமாகிறது!
சாதிகள் இல்லை
சமுதாய களைகள் இல்லை
சமத்துவம் நம்மிடத்தில் சங்கமமாகிறது!
நம் மூச்சுக் காற்று
இன்னும் முடிவுறாமல் இருப்பது
அந்து மூன்றெழுத்து
மந்திரத்தில்தான்-நட்பு!
அன்பர்கள் அனைவர்க்கும்
என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, இலக்கியம், கதை, கவிதா, சமுதாயம், சாதி, தோல், தோழர்கள் தினம், நட்பு, நண்பர்கள், நண்பர்கள் தினம், பாசம், பேச்சு, மதம், மந்திரம், மூச்சு, வாழ்த்துக்கள்.
3 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. soundarapandiann | 12:56 பிப இல் ஓகஸ்ட் 1, 2011
அழகிய கவிதை
2. soundarapandiann | 12:56 பிப இல் ஓகஸ்ட் 1, 2011
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..
3. suganthiny | 1:09 பிப இல் ஓகஸ்ட் 1, 2011
அதாவது பனித்துளியும் மழை துளியும் கலந்தால் வித்தியாசம் தெரியுமா?
அதுபோல தான் நட்பு…..