Posts tagged ‘குழந்தை’
எச்சில் சோறு தின்றவள்!
எச்சில் சோற்றை
எங்கோ தின்றவள்
என்னை எச்சமாய்
ஈன்றெடுத்து
எச்சில் இலைகளோடு
எரிந்து விட்டுப்போகிறாள்
குப்பைத்தொட்டியில் கேட்கும்
குழந்தையின் குரல்!
எங்கிருந்து வருகிறதோ!
வண்ண மீன்களை
வளர்ப்பு பிராணிகளை
காணும் போது
என்னையும் அறியாமல்
எங்கிருந்து வருகிறதோ
குழந்தை மனசு!
புத்திர பாசம்!
- உன் பிஞ்சு விரல்
பற்றும் போதெல்லாம்
வற்றிப் போகிறது
இந்த உலகைப் பற்றிய
நினைவு!
- நீ மட்டுமே
என் உலகமாய்
நினைவு முழுக்க!
குழந்தை மனசு!
பலமணிநேரம்
தூங்கி முடித்தும்
அலாரத்தை
அணைத்து விட்டு
சில மணித்துளிகள்
தூங்கிக் கழிப்பதில்
பிரியப்படுகிறது
குழந்தை மனசு!