Posts tagged ‘சினிமா’
விந்து தந்து வெற்றிபெற்ற இளைஞன் – vicky donor
நண்பர்கள் நெடுநாட்களாக சொல்லி சொல்லி சமீபகாலமாகவே பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.. விக்கி டோனர்-விந்துதானம் பற்றிய….
கமலுக்கு இது தேவைதான்
கமல் என்றாலே நல்ல நடிகர்,சினிமாவில் புது முயற்சிகளின் பிரம்மா, சர்ச்சைகளின் நாயகன் என்பது எல்லோரும் அறிந்தது. கமல் இருக்கும் இடத்தில் சர்ச்சை இருக்கும் என்று பத்திரிக்கைகள், ஊடகங்கள் சொன்னதலோ என்னவோ அதையே தனக்கு சாதகமாக கமலும் பயன்படுத்த தொடங்கி விட்டார். எந்த எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வித்தை கற்றவரைப்…..
மேலும்..
உன் உதட்டை சுவைத்த நான்!
இப்படியோர் இனிப்பை
இதுவரை நான்
சுவைத்ததில்லையே
என்று
உன் காலைக் கடித்ததற்கே
கர்வப்பட்டு சொல்(கொள்)கிறதாமே
எறும்பு!
என்னென்று சொல்வேன்
உன் உதட்டை சுவைத்த
நான்?
400 வது பதிவு- ஓர் நாளில் மூவர் பிரசவம்
ஒரு தாய் தன் கருவை சுமக்கின்ற தருணம்..கரு சுமந்ததிலிருந்து அவள் பெறுகின்ற அகமகிழ்வு.வளரும் கருவை வயுறு தடவி பெறுகின்ற சுகம்.உதைப் பட்டபோதும் உள்ளம் மகிழ்கின்ற உணர்வு.வயிறு வளர வளர அவள் உடலில் ஏற்படும் வனப்பு.என கடக்கும் தருணங்களைத் தாண்டி அக்குழந்தையின் முகம் பாக்க துடிக்கின்ற ஏக்கம் எத்துனை சுகமானதோ,அவள் பெறுகின்ற பிரசவ வலியையும் தாண்டி..அத்தனை சுகம் சுமந்த பிரசவ நாள் இன்று..எனக்கும் ,என் உடன்பிறந்த தமையன் ஜெய் மற்றும் உடன் பிறவாத் தமையன் ராகுலுக்கும்.
—-000—
எனது பிரசவம் :
இன்று என் படைப்பாளி 400 வது படைப் பெழுதுகிறான்.ஓராண்டைக் கடந்து எனக்கும் இணையத்துக்குமான உறவுபாலம், என்னுடன் ஏனைய நண்பகளை இணைத்து வைத்திருக்கும் களம்.
எத்தனை உறவுகள்..என்மேல் பாசம் சுமந்து,என் எழுத்துக்களைப் படித்தும்,பாராட்டியும்,விமர்சித்தும் எம்மை செதுக்குகின்ற பண்பான நேசங்கள் எத்தனை..அது என்னில் உண்டாக்கி இருக்கும் நெகிழ்ச்சி.மட்டற்ற மகிழ்ச்சி.அதை என் சின்ன வார்த்தைகளால் எழுதி செதுக்கிட இயலாது.வலைப் பதிவு எமக்கு கொடுத்திருக்கும் உறவுகளை பற்றி எழுதினால் எமக்கு ஓராண்டு பத்தாது.இந்த தருணத்தில் எம்மேல் உரிமை மிகுந்த அந்த உறவுகள் அனைவர்க்கும் நன்றி சொல்லக் கடமைப்படுகிறேன்.
—-000—
எம் தமையன்களின் பிரசவம்: .
பல கனவுகளோடு கனவுப்பட்டறைக்குள் நுழைந்து ,தங்கள் கனவுகளை வெள்ளித்திரையில் நினைவாக்க வாடா போடா (திரைப்படம் ) பயிற்சிப் பட்டறையில் கலை இயக்குனனாய் ராகுலும் ,உதவி இயக்குனனாய் ஜெய்யும், வேலை செய்து இன்று வெள்ளித்திரையில் தங்கள் பெயர்களை ,முதன் முதலாய் உலகம் பார்க்க உரித்தாகும் நாள்.திரைத் துறையில் என்னிருத் தம்பிகளின் விலாசமும் விசாலப் படும் நாளின்று.ராகுல் மேலும் பல சிறந்த படங்கள் செய்து சீரிய முறையில் பெயர் விளங்கவும்,பார் போற்ற பவனி வரவும்,வெற்றி பல சூடவும்,இன்று உதவி இயக்குனனான ஜெய் ,விரைவில்இயக்குனனாய் ஜெயம் கொண்டு ,பரணி ஆளவும், இத்தரணி போற்றவும் வளம் வர இந் நன்நாளில் வாழ்த்துவதில், பெருமகிழ்வு கொள்கிறேன் தன் குழந்தையை பிரசவித்த தாயைப்போல!
நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்சில் தேர்வு செய்தமைக்கு.
அது என்ன ஆத்திரம்!- கமல் மீது அண்ணன் அறிவுமதியின் சீற்றம்
தமிழ் கவிஞர் தன் பாராட்டு விழாவுக்கு அறிவுஜீவி கமலை அழைத்து அரியணையில் அமரவைப்பதும்,தமிழக முதல்வர் பேரன் தன் தயாரிப்பில் தமிழனை தரங்குறைத்த வசனங்களை அரங்கேறிக்கொண்டிருக்கும் போது, அண்ணன் அறிவுமதி தன் கோபக்கனலை,தமிழனின் தன்மானத்தை, தன் பேனாவில் ஊற்றி நக்கீரனில் எழுதிய வரிகள் நம்மை சற்று ஆறுதல் படுத்துகிறது.
30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு
இரவுக் காட்சி
உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம் மன்மதன் அம்பு.
மார்கழி மாத சபா ஒன்றுக்கு
வந்து விட்டோமோ
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த அம்பு இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை உணர்ந்து திருந்துதல் நல்லது.
கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால் முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
இந்த மன்மத அம்புவின் வாயிலாக
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி செய்திருக்கிறார்.
“தமிழ் சாகுமாம்
தமிழ் தெருப் பொறுக்குமாம்.
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் போலஞ்
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..
இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட நீங்கள்
பெரிய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!
ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!
இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!
ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!
பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.
ஆனால்
“அவன் தமிழ்
சாக வேண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்.”
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!
தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..
“யாதும் ஊரே யாவரும்‘
கேளிர்’ என்று
உலகையே பெருக்கியவர்கள்
எங்களைப் பார்த்து
உங்கள்
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,‘
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற
கைபேசியின் மேல் வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.
கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!
அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து
“உயிரே போகுதே’
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
“உயிரே போகுதே’
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!
அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.
அதற்கு
வருவான்‘
வருவான்
வருவான்
“தலைவன்
வருவான்!’
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.
நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!
நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேண்டாமா?
அன்புடன்
அறிவுமதி