Posts tagged ‘செயல்’
காந்தி ஜெயந்தி கொண்டாட்டமாம் !
விவரம் தெரியா வயதில்
வெட்ட வெயிலில்
மொட்டையடிக்கப்பட்டு
ஊர்வலமாய் குழந்தைகள்
காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்!
இன்று பிறந்த மழையே !
இடியென அலறுகிறாள்
பிரசவ வலியில்
உன் வான் அன்னை!
–0O0—
வலியிலும் மின்னலென
மலர்கிறாள்
தம் மடி சுமந்த ம(ழை)லை
உன் முகம் காண !
–0O0—
கருமேகமென
அவள் தேகம்
கருத்திருந்த போதும்
உன்னை வெளிர் தேகமாய்
பெற்றெடுத்து
பெருமை பொங்குகிறாள் !
–0O0—
இன்று பிறந்த மழையே
எத்தனை நாள்
உன் அன்னை மடியில்
கருவுற்று காத்துக்கிடந்தாயோ
உன் தந்தைமண்ணைக் காண !!
ஒப்பற்ற தியாகமே!உண்மை உண்ணாவிரதமே!!
யுகம் வென்றவனே
உண்மைக்கு போராடி
உயிரை துறந்தவனே
கனலென எரிந்த உணர்வை
உலகுக்கு காட்டி
கேணல் ஆனவனே!
லெப்டினன் கேணல் திலீபனே!
உன்னை எப்போதும்
தமிழினம் மறவாது!
ஒப்பற்ற தியாகமே !உண்மை உண்ணாவிரதமே !!
உனக்கு எம் வீரவணக்கம்!!!
என்னை காதலிக்க வேண்டாம்!
என்னை காதலிக்க கூட
வேண்டாம்
அடிக்கடி வந்து
என் கண் முன்னே
காட்சியளித்துப் போ
எம் கற்பனை ஊற்று
காயாமல் இருக்கட்டும்!
மழைவந்து நனைக்கும் போதெல்லாம் !
- இருள்கின்ற மேகக்கூட்டம்
எம் இருவருக்குமான
இரவின் நீட்சி!
- மின்னலென பளிச்சிடும் ஒளியில்
அவள் நோக்கும்
பார்வை வசீகரம்!
- அவள் வாய்விட்டு
சிரிப்பது போன்று
வந்து ஒலிக்கிற இடியின் சத்தம்!
- தூரல் வந்து
தொடுகிற போது
அவள் வருடுகின்ற தீண்டலின் ஸ்பரிசம்!
- மழைவந்து நனைக்கும்
போதெல்லாம்
அவள் வந்து அணைக்கும் சுகம்தான்!