Posts tagged ‘வயல்’
தண்ணீர்…கண்ணீர்!
பணக்கார பங்களாவில்
அழகுக்காய்
கொட்டுகிறது தண்ணீர்!
அருகாமை குடிசைகளில்
தண்ணீர் வேண்டி
அரசுக்கு மனுபோட்டு
இயலாமையில் மக்கள் கண்ணீர்!
குடி கெடுத்தவன்!
- ஓர் குடும்பம்
வாழ்ந்திடவே
ஓராயிரம் குடி
கெடுத்தாய்
ஆறறிவாளனே !
- வீடு கட்டுதற்காய்
வெட்டிய மரக்கிளையில்
ஒட்டிக்கொண்டு
உயிர்வாழ்ந்த
உயிரினங்களின் புலம்பல்.