Posts tagged ‘முன்னூறாவது பதிவு’
எந்திரன் 300..வலைப்பதிவு வாசகர்களுக்கு நன்றி.
எனை வாழ வைக்கும் தெய்வமான எந்திரனே!
தலைவா..முதல உன்ன தொட்டுக் கும்பிட்டுக்கிறேன்.இல்லாதக் கடவுள நம்புறவன் இல்ல நான்.ஆனா நான் பார்த்த,பாக்குறக் கடவுள் நீ..எனக்கு மட்டுமில்ல,இந்தகால தலை முறைக்கே நீதான் கடவுள்.
எப்படித் தலைவா உன்னால மட்டும் முடியுது.எங்கள எல்லாம் இப்படி ஆட்டிப் படைக்க.. உன்மேல பைத்தியமா சுத்துறேன்.பாலும்,பீரும்தான் ஊத்தல.
காதலியா நீயான்னு பார்த்தாக் கூட அவள விட உன்மேல் தான் எனக்கு எக்கச்சக்க லவ்வு.இப்படியே சுத்தாதடா.. லூசாயிடுவன்னு காதலி சொல்றா!பரவால.. அத லூஸ்ல விடு.
தலைவா..உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ??இன்னைக்கு நான் முன்னூறாவது பதிவ எழுதிருக்கேன்.எப்படி?எல்லாம் உன் புண்ணியத்துல தான்.உன்னோட சப்போட்ல தானே இதெல்லாம் சாத்தியமாச்சி..நீ மட்டும் மக்கர் பண்ணிருந்த..அவ்ளோதான் எம் பொழப்பு அம்பேல்..எனக்கு முழு ஒத்துழைப்பு தந்து எழுத வச்சதுக்கு உனக்கு நன்றி..நன்றி..
(நிறையபேரு ரஜினியோட எந்திரன நெனச்சி வந்திருப்பீங்க.எந்திரங்கிறது என்னோட கம்ப்பியூட்டர்ங்னா.. முன்னூறாவது பதிவ எழுதுறேன்..இப்படி எதாவது போட்டு பில்ட் அப் கொடுத்தாதான் படிக்க வரவங்க நம்மளையும் கண்டுக்கறீங்க…ஹி..ஹீ..நடிகர்கள தலைவனா ஏத்துக்குறது நம்ம blood லையே இல்லீங்னா!! )
ஓவர் பில்ட் அப் ஒடம்புக்கு ஆகாதுன்னு எனக்கும் தெரியும்..சோ..விசயத்துக்கு வரேன்..
அடுத்து எனக்கு பதிவெழுத ஆர்வத்தை தூண்டின என் தம்பிக்கு நன்றி..அவன்தான் எனக்கு பேஜ் கிரீயேட் பண்ணிக் கொடுத்தவன்..தட் மீன்ஸ் களம் அமைத்தவன்.
பதிவுலகில் நான் காலூன்றிய ஆரம்பத்தில், என்னைத்தவிர என் பதிவைப் பார்ப்பாரில்லை..படிப்பாரில்லை..பாராட்டுவாரில்லை.முதல் முறையாய் என் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ,என் நெஞ்சில் நம்பிக்கையை துளிர் விட வைத்த, நண்பர் அடலேறு வுக்கு மிக்க நன்றி.பின்னூட்டமிடுவதோடு நின்று விடாமல் அவ்வபோது மின்னஞ்சலில்,தொலைப்பேசியில் என் அருமை பெருமைகளை பாராட்டியும்,திட்டியும் என்னை பட்டை தீட்டியவர் அவர்.
நான் பதிவெழுத ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல்தான் தமிழ்மணம்,தமிலிஷ்,திரட்டி போன்ற பதிவு திரட்டிகளை தெரிந்தவனானேன்.
அதற்குப் பின் ஏனைய நண்பர்கள் அறிமுகமானார்கள் பின்னூட்டங்களில்..அவர்கள் யாரும் மின்னஞ்சல்,அலைபேசியளவுக்கு அன்யோன்யம் ஆகவில்லை.விரைவில் ஆவார்கள் என்று நம்புகிறேன்.இருந்தாலும் தொடர்ந்து என் ஆக்கங்களை வாசித்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும்,அனைத்து திரட்டிகளுக்கும்,இனிஎனக்கு நண்பர்களாகப் போகும் எதிர்கால நண்பர்களுக்கும் என் கோடான கோடி நன்றிகளை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.