அன்பர்களுக்கு வேண்டுகோள்
இதுநாள்வரை எனக்கு இத்தளத்தில் ஆதரவு நல்கி வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி..நன்றி..தற்போது இத்தளம் www.padaipali.com என்ற முகவரியில் மேம்படுத்தப்பட்ட சேவைக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது..இனி அன்பர்கள் அனைவரும் அத்தளத்திற்கு வந்து அன்புத்தொல்லை தருமாறு பாசமுடன் வேண்டுகிறேன்.
ஆள்பவனும்,அபலைத் தொண்டனும்!
ஆள்பவனும் அரசியலால்
வாழ்பவனும்
காலாட்டிக்கொண்டு வீட்டில்!
அப்பாவி மனிதனும்
அபலைத் தொண்டனும்
அடித்துக்கொண்டு ரோட்டில்!
எச்சில் சோறு தின்றவள்!
எச்சில் சோற்றை
எங்கோ தின்றவள்
என்னை எச்சமாய்
ஈன்றெடுத்து
எச்சில் இலைகளோடு
எரிந்து விட்டுப்போகிறாள்
குப்பைத்தொட்டியில் கேட்கும்
குழந்தையின் குரல்!
நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்!
மலரை சுவைக்க வரும்
வண்டுபோல என் வருகை ஏனோ
சாதுவாயிருக்கிறது!
பின் பூனையிடம் மாட்டிய
எலிபோல விளையாட்டு
வேகமெடுக்கிறது!
புலியென மாறி பாய்ந்து
வெறிகொண்டு மானை சிராய்த்து
கடித்து வைக்கிறேன்
கொஞ்சம் மூர்க்கமாய்!
யானை பலமும்,குதிரை வேகமும் கொண்டு
உன்னை தாக்கி மகிழ்கிறேன்
கொடூரத்தின் உச்சமாய்!
நீ தாக்குதலை எதிர்கொண்டு
தயங்காமல் நிற்கிறாய்
நிராயுதபாணியாய் நின்றபடி
இன்னும் தாக்க சொல்கிறாய்!
சாது போல இருந்தவள் என்னை
மோத சொல்லி கேட்கிறாய்!
தாக்குதலை தொடுத்து விட்டு
குருதிவடிய நான் குப்புற விழுகிறேன்
பூவென இருந்து கொண்டு
நீ புலியை சாய்த்து வெல்கிறாய்!
என்ன மாயம் செய்தாயோ
நான்கு சுவற்றுக்குள்
நடக்கும் போரில்!
நீயிட்ட கோலம்!
நீ காலால் கோலமிட்டு
என்னைக் கடக்கிறாய்
எளிதாய்!
என் இதயம் கொண்ட
கோலத்தை
என்னென்று அறியாமல்!












