அவளுக்கின்று பிறந்தநாள்
ஏப்ரல் 25, 2010 at 12:44 முப 8 பின்னூட்டங்கள்
அன்பின் இலக்கணம் சொல்லி
என்னில் அகம் புகுந்தவள்..
அகம் புகுந்து என்னில்
அகம்பாவம் உடைத்தவள்.
அவளுக்கின்று பிறந்தநாள்
அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.
ஊருக்கு அடங்காதவனை
தன் உறவுக்குள் அடைத்தவள்.
பிற்போக்கு உடைத்தென்னில்
முற்போக்கு விதைத்தவள்.
என் அன்பிற்க்கின்று பிறந்தநாள்
ஆராதித்து மகிழ்கின்றேன்.
கல்லான நெஞ்சிக்குள்ளும்
காதல் மொழி புதைத்தவள்.
களங்கமில்லா என் நெஞ்சை
களவு செய்து சென்றவள்.
காதலிக்கு பிறந்தநாள்
கருணைமொழி கூறுகின்றேன்.
இறுகிக்கிடந்த உளந்தனை
உருகிக் குலைய செய்தவள்.
லப் டப் ஆன ஒலியை
லவ் டப் ஆக்கி எனை வென்றவள்.
உயிர்க் கின்று பிறந்தநாள்
உளமாற போற்றுகின்றேன்.
உமக்கு மணமாயினும்
மறவாது என் நெஞ்சம்.
முதல் காதல் ஆயிற்றே
என் மனம் முழுக்க உன் காதல் வாசமே எஞ்சும்.
என்னவளுக்கு..என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
Entry filed under: கவிதைகள். Tags: அன்புடன், உயிரே, காதலன், காதலி, காதல், காதல் கடிதம், பிரியம்டன், பிறந்தநாள், பிறந்தநாள் வாழ்த்து, வாழ்த்து அட்டை.
8 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. வித்யாசாகர் | 10:21 முப இல் ஏப்ரல் 25, 2010
இது வெறும் கவிதையெனில் உங்களுக்கும், உங்கள் காதலிக்கு பிறந்த தினமெனில் அவருக்கும், வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!
வித்யாசாகர்
2. படைப்பாளி | 10:41 முப இல் ஏப்ரல் 25, 2010
நன்றி நண்பரே..மிக்க நன்றி.
3. DREAMER | 11:30 முப இல் ஏப்ரல் 25, 2010
கவிதை அருமை! இக்கவிதையை எழுதுவித்த உங்களது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
4. படைப்பாளி | 11:35 முப இல் ஏப்ரல் 25, 2010
நன்றி நண்பா..
5. sree | 8:42 பிப இல் ஏப்ரல் 27, 2010
avalai pattri yezhudhyeai meendum pirandhirukkiraai neeyea!!!!!!!!!!!!!!!
6. படைப்பாளி | 9:09 பிப இல் ஏப்ரல் 27, 2010
tanx friend..
7. Sri | 9:30 பிப இல் ஏப்ரல் 29, 2010
MiKKa Nanri
8. படைப்பாளி | 11:56 முப இல் மே 5, 2010
நன்றிக்கோர் நன்றி.