Posts tagged ‘நெகிழ்ச்சி’
ஆள்பவனும்,அபலைத் தொண்டனும்!
ஆள்பவனும் அரசியலால்
வாழ்பவனும்
காலாட்டிக்கொண்டு வீட்டில்!
அப்பாவி மனிதனும்
அபலைத் தொண்டனும்
அடித்துக்கொண்டு ரோட்டில்!
நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்!
மலரை சுவைக்க வரும்
வண்டுபோல என் வருகை ஏனோ
சாதுவாயிருக்கிறது!
பின் பூனையிடம் மாட்டிய
எலிபோல விளையாட்டு
வேகமெடுக்கிறது!
புலியென மாறி பாய்ந்து
வெறிகொண்டு மானை சிராய்த்து
கடித்து வைக்கிறேன்
கொஞ்சம் மூர்க்கமாய்!
யானை பலமும்,குதிரை வேகமும் கொண்டு
உன்னை தாக்கி மகிழ்கிறேன்
கொடூரத்தின் உச்சமாய்!
நீ தாக்குதலை எதிர்கொண்டு
தயங்காமல் நிற்கிறாய்
நிராயுதபாணியாய் நின்றபடி
இன்னும் தாக்க சொல்கிறாய்!
சாது போல இருந்தவள் என்னை
மோத சொல்லி கேட்கிறாய்!
தாக்குதலை தொடுத்து விட்டு
குருதிவடிய நான் குப்புற விழுகிறேன்
பூவென இருந்து கொண்டு
நீ புலியை சாய்த்து வெல்கிறாய்!
என்ன மாயம் செய்தாயோ
நான்கு சுவற்றுக்குள்
நடக்கும் போரில்!
கொடுத்து வைத்தவன்!
ஒய்யாரமாய் உன்னருகில்
உட்காரும்
ஒவ்வொரும் நிமிடங்களிலும்
உணர்கிறேன்
உலகத்தில் என்னை விட
கொடுத்து வைத்தவன்
எவனுமில்லை!
என்னை நீ காதலிப்பதால்
காதலுக்கு மட்டும்
கொடுத்து வைத்திருக்கிறது!
விரும்பி தொலைக்கிறேன்!
உன்னை நான்
விரும்பி தொலைக்கிறேன்!
ஆதலாலே
உன்னிடத்தில் என்னை
விரும்பித் தொலைக்கிறேன்!