சிக்ஸ் பேக் கனவு
ஏப்ரல் 9, 2010 at 12:22 பிப 4 பின்னூட்டங்கள்
- மரமேறி,காடேறி
மாடு மேய்ச்சி திரிஞ்சப்போ
அடிவயிறு ஒட்டிப்போய்
ஆறு பீசாய் வச்சிருந்தேன்.
- பட்டணத்தில் வேலப்பாத்து
பளபளத்து வரும்
அண்ணன்களின்
தளதளக்கும் உடலைப் பார்த்து
தடவிக்கிட்டேன்..
சப்பையான என்வயிறை.
- குழி விழுந்த கன்னமும்
ஒடுங்கிப்போன உடலும்
கோடு விழுந்த என் வயிறும்
குண்டாக வேணுமுன்னு
கோவில் போய்
வேண்டிகிட்டேன்.
- இப்போ…பட்டணத்து வாசியாகி
பாதிவாழ்க்கை..
எழுந்ததும் ஜாகிங்..
ஈவினிங் வாகிங்..
ரெகுலர் ஜிம்…
அல்லாடி
அலைகின்றேன்.
ஊதிப்போன என் வயிறை
ஒட்டிப்போன வயிறாக்க.
Entry filed under: கவிதைகள். Tags: அண்ணன், அல்லாடி, ஆறு, ஈவினிங், குழி, கோவில், ஜாகிங், ஜிம், மாடு, வாகிங், வாழ்க்கை.
4 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. Raadhai | 2:14 பிப இல் ஏப்ரல் 9, 2010
எளிமையாக அழகாக இருக்கிறது.. உங்கள் கவிதை.
உண்மையும் கூட.. 🙂
2. படைப்பாளி | 2:38 பிப இல் ஏப்ரல் 9, 2010
நன்றி தோழி…
3. சிக்ஸ் பேக் கனவு « மனதுக்கு பிடித்தது | 2:36 முப இல் ஏப்ரல் 14, 2010
[…] நன்றி: படைப்பாளி […]
4. படைப்பாளி | 9:13 முப இல் ஏப்ரல் 14, 2010
நன்றி நண்பரே..