காதலி காவியம்…
ஒக்ரோபர் 1, 2009 at 8:48 பிப 1 மறுமொழி
காதலித்த போது அவளிடம்
-கவிதை கேட்டேன்…
உன்னை போல்..எனக்கு,கவிதை எழுத தெரியாது.
தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.
இருந்தாலும் உனக்காக .. ஓர் ஒற்றைச்சொல் கவிதை
உன் பெயர் என்றாள்.
இடைமறித்து சொன்னேன்…
அது என் அப்பன் அருளியதென்று….
காத்திரு கண்ணா…
-என காதலி சொன்னாள்.
உனை கைப்பிடிக்கும் காலம் வரும்…
அப்போ -என் பெயரும் உன் பெயரும்
உறவாடி ஒன்று சேரும்….
அன்றோ …
என் பெயர் கவிதையல்ல…
காவியம் என்றாள்.
Entry filed under: கவிதைகள்.
1 பின்னூட்டம் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. prabha | 7:57 பிப இல் ஒக்ரோபர் 24, 2010
இன்னும் காத்து கொண்டு தான் இருகிறீர்களா கண்ணா??????