எது சுதந்திரம்? எங்கே சுதந்திரம்?
ஓகஸ்ட் 15, 2010 at 10:00 முப 3 பின்னூட்டங்கள்
- மேல்சாதி-கீழ்சாதி
மேல்மட்டம்-அடிமட்டம்
கொத்தடிமை-கூலிக்காரன்
ஆண்டை-அடிமை
சாதிமத அடிதடியில்
சாதனை இந்தியன்
-ஆனாலும்
சமத்துவ இந்தியாவாம்!!
விடுதலை என்றார்கள்
யாருக்கென்று தெரியவில்லை?
————————————————–
- என்னினம் இறந்தாலும்
அழக்கூட அனுமதியில்லை
இனத்தால் நீயிங்கு
இணைவதற்கு இடமில்லை
மீறி இணைந்து பார்
சிறையிலே நீயிறுக்க
ஏனைய அறையுண்டு.
வாயை மூட
வந்தது சட்டம்.
எழுதுவதை தடுக்க
எழுகிறது திட்டம்.
சுதந்திரநாடு என்றார்கள்
அர்த்தமெனக்கு புரியவில்லை.
Entry filed under: கவிதைகள். Tags: அடிமட்டம், அடிமை, ஆண்டை, இந்தியா, கீழ்சாதி, கீழ்மட்டம், கூலிக்காரன், கொத்தடிமை, சமத்துவ இந்தியா, சுதந்திரநாடு, சுதந்திரம், மேல்சாதி, மேல்மட்டம், india, indipendence day, tamil, tamilnadu.
3 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. ஜிஎஸஆர் | 10:32 முப இல் ஓகஸ்ட் 15, 2010
மேலே இருக்கும் படம் ஒன்றே போதும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்கிறது உங்கள் கவிதையும் அருமை
2. படைப்பாளி | 11:04 முப இல் ஓகஸ்ட் 15, 2010
நன்றி நண்பரே
3. adhithakarikalan | 12:16 பிப இல் ஓகஸ்ட் 16, 2010
நண்பரின் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன்… சுதந்திரமாம்… புடலங்காவாம்… பெரியார் சொன்ன மாதிரி அது ஒரு துக்க நாள்.