நாழிகை பிறக்கிறது!
ஜூன் 3, 2011 at 11:09 முப 2 பின்னூட்டங்கள்
- இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தால் பரவாயில்லை.
அதற்குள் முடிந்து விட்டதே
இன்றைய பொழுது.
எவ்வளவோ வேலையிருக்கிறது
காலம் இப்படியே நீளக் கூடாதோ.
ஒரு நாளுக்கு 24 மணிநேரம்
என்று சொன்னவன் யாரோ!
- எப்போடா முடியும்
இன்றைய பொழுது.
என்ன செய்வதென்று
யோசிக்க தெரியவில்லை.
மணியானால் பசிக்கிறது
சாப்பிட வேறு வேண்டும்
சலிப்பாயிருக்கிறது..
காலம் கொஞ்சம் கரையக் கூடாதா.
எவன் கண்டுபிடித்தான்
24 மணிநேரம் ஓர்நாள்!
- இப்படித்தான்
நாளுக்கொரு மாதிரியும்
ஆளுக்கொரு மாதிரியுமாய்
நாழிகை பிறக்கிறது!
Entry filed under: கவிதைகள். Tags: அன்பு, இலக்கியம், ஓவியம், கதை, கவிதை, காலம், காவியம், சமாதானம், சலிப்பு, செய்தி, நாழிகை, நேரம், படைப்பாளி, படைப்பு, பாசம், மணி, மதிப்பு, மரியாதை, வாழ்க்கை.
2 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. பாரதசாரி | 11:43 பிப இல் ஜூன் 3, 2011
மிக அருமை!! தொடருங்கள் தோழரே!!
2. படைப்பாளி | 9:15 முப இல் ஜூன் 4, 2011
மிக்க நன்றி தோழரே!!