Posts tagged ‘உரிமை’
நல்லக்காதல் !
- இளைப்பாற கொஞ்சம்
இடமும்
களிப்பார கொஞ்சம்
கருணையும்
உன் மடியிலும்
அடியிலுமாய்
என்னை கிடத்தி இருக்கின்றன!
- காமத்தையும்,காதலையும்
தாண்டி
கண்டறிகிறேன்
உன்னிடத்தில்
ஏதோ ஓர் காரணி
என்னை கட்டுண்டு வைத்திருக்க!
- செல்லத் தீண்டலிலும்
உன் செவிமடல் கடிப்பினிலும்
என்னை சிறையிட்டு வைப்பதிலும்
காதலிக்கும் ,மனைவிக்குமான
காலக்கனவை
நீயிட்டு நிரப்புகிறது
உன் நினைவும்,புணர்வும்!
- பாரிய பாசமும்
தேறிய நேசமுமாய்
விசாலமடைகிறது
ஊருக்கு தெரியா
நம் உறவின் நீட்சி!
இன்று பிறந்த மழையே !
இடியென அலறுகிறாள்
பிரசவ வலியில்
உன் வான் அன்னை!
–0O0—
வலியிலும் மின்னலென
மலர்கிறாள்
தம் மடி சுமந்த ம(ழை)லை
உன் முகம் காண !
–0O0—
கருமேகமென
அவள் தேகம்
கருத்திருந்த போதும்
உன்னை வெளிர் தேகமாய்
பெற்றெடுத்து
பெருமை பொங்குகிறாள் !
–0O0—
இன்று பிறந்த மழையே
எத்தனை நாள்
உன் அன்னை மடியில்
கருவுற்று காத்துக்கிடந்தாயோ
உன் தந்தைமண்ணைக் காண !!
இருட்டு இனிமை தருகிறது!
பகலை விடவும்
இருட்டு எமக்கு
இனிமை தருகிறது
நாமிருவரையும்
இறுக,இறுக்க
இணைத்து வைப்பதினால்!
உறுதி செய்கிறேன்..உண்மை நட்பென்று!
- சமூக வலைப்பின்னல்களில்
நட்பு பூண்டு
பேசும் போதெல்லாம்
தன்னிடத்தில் மட்டும்
பேசுங்கள்
என்று தன்னகத்தே
உரிமை எடுத்துக் கொள்கிறது
ஒரு சில நட்புகள்!
- அது ஒவ்வாமை
என்றெண்ணி
நான் ஒதுங்கிடும் வேளை
பாசம் மேலிட
உரிமையின் உச்சத்தில்
என்னை block செய்து
தன்னை
உறுதிசெய்து கொள்கிறது
உண்மை நட்பென்று!
மூர்ச்சையாக்கும் மந்திரம்!
- அலைபேசியில்
நம் அரட்டையின்
போதெல்லாம்
உன்னை
முத்தமிட சொல்கிறேன்.
- முடியாது போ
என்று
முரண்டு பிடித்தபடி
நீயும்
பேச்சின் முடிவில்
நானறியா நேரத்தில்
நச்சென்று வைக்கிறாய்
இச்சொன்று !
- நீயிட்ட முத்தத்தில்
வரும்
வெறும் சத்தத்தில்
என்னை
மூர்ச்சையாக்கும் மந்திரம்
எங்கு கற்றாயோ நீ!