Posts tagged ‘கொலைவெறி’

அவன்.. இவன்..

  • அன்றைக்கு ஆண்டை வீட்டின்

கொத்தடிமையாய்

அவன்!

  • இன்றைக்கு கல்வியறிவில்

மிக உயர்ந்து மதிப்புமிக்கவனாய்

சமுதாயத்தில் அவன் மகன்

இவன்!

  • அன்றைக்கு சேரிக்காரன்

என்று

ஒதுக்கப்படவனாய்

அவன்!

  • இன்றைக்கு சேற்றில்

பிறந்த செந்தாமரையாய்

ஒளிமிக்க இவன்!

  • அன்றைக்கு அவன் அப்பனை

அடேய் என்றழைத்தான்

உயர்குலத்தான் என்கிற

அவன்!

  • இன்றைக்கு அவன் மகனை

வாய்விட்டு வராத வார்த்தைகளால்

சார் என்கிறான் அவனே

இவன்!

  • பணம் இருக்கிறது

படிப்பறிவில் உயர்ந்து விட்டான்

சாதி அழிந்துவிட்டது என்கிறான்

அவன்!

  • தகுதியில் உயர்ந்தபின்னும்

தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்

இழிகுலத்தான் என்று சொல்லி

கொலைவெறியில்

இவன்!

  • தாழ்த்தப்படவன் என்றறிந்தும்

படிக்கும் போது

“மச்சி “என்று

நட்பு பாராட்டியவன்

அவன்!

  • தன் குலப்பெண்ணை

காதல் கொண்டான் என்பதற்காய்

கீழ்சாதிக்கார நாய்

என்கிறான் இப்போ

இவன்!

  • பள்ளியில் படிக்கிறான்

அவனும் இவனும்

ஒன்றாய்..

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;

தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’

ஜூன் 17, 2011 at 11:57 முப 14 பின்னூட்டங்கள்

முள்ளிவாய்க்காலுடன் முடியாது!

இதுபோன்றொரு

நாளில்தான்

எம் சொந்தங்கள்

சோறின்றி பட்டினியாய்

உறக்கமின்றி ஊர் ஊராய்

உறவுகளை இழந்து

உரிமைகளை துறந்து

ஓய்வின்றி உழன்று

கால்கடுக்க நடந்து

கன்னி வெடிகளில் சிக்கி

பதுங்குகுழிகளில் புதைந்து

உறுப்புகள் ஆங்காங்கே

சிதறி விழுந்திட

இருக்கின்ற உயிரையாவது

எடுத்துக் கொண்டு

போவோமென

ஓடோடி வந்தனர்

இந்த உலகத்திடம்

உயிர் பிச்சை கேட்டுக்கொண்டு!

அவர்கள்

வரும் வழியெங்கும்

பிணங்களின் குவியல்.

துறந்த உயிர்களின்

துர்நாற்றம்.

முலை அறுத்து

கொல்லப்பட்ட பெண்.

இல்லாத மார்பில் பால் குடிக்க

எத்தனிக்கும் குழந்தை.

பிறப்புறுப்பில் துப்பாக்கி

துளையிட்டு

தொலைந்த பெண்போராளி.

சுமந்து பெற்ற பிள்ளை

முன்னே

ராணுவ ராட்சசன்களை

சுமந்த அம்மா.

அம்மா முன்னே

அம்மனமாக்கப்பட்ட

மகன்.

தந்தை பார்க்க

கற்பழிக்கப்பட்ட

மகள்.

உயிருடன் பிடித்து

கண்களை கட்டி

சுட்டுக் கொல்லப்பட்ட

இளைஞர்கள்.

எவ்வளவோ கத்தியும்

கேட்கவில்லை

இவ்வுலகின்

செவிட்டு செவிப்பறைகளுக்கு

எம்மினத்தின் குரல்.

எங்கேனும் பார்த்திருக்குமோ

இவ்வுலகம்

இப்படியோர் அவலம்.

முள்ளி வாய்க்காலில் முடிந்துவிட்டது

எம் வரலாறென

மூச்சு விடுகிறாயா

சிங்களனே ..

பொறுத்திரு..

உன் சிரம் கொய்யும்

காலம்

சீக்கிரம் வரப்போகிறது!

மே 18, 2011 at 10:22 முப 6 பின்னூட்டங்கள்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,710 hits