முதிர்கன்னி ஆனவளுக்கு!
ஜனவரி 11, 2011 at 8:38 முப 18 பின்னூட்டங்கள்
- வாசல் தேடி வந்து
பொண்ணு கறுப்பென்றான்
ஒருவன்
கலையில்லை யென்றான்
மற்றொருவன்
ஒல்லி என்றான்
இன்னொருவன்.
இவளுக்கு பிடித்திருக்கிறது
வந்தவர்கள் ஆயிரம் பேர்!
- வாசல்தேடி வந்தவனை
வசதியில்லை என்கிறாள்
உயரமாய் இருந்தால்
பரவாயில்லை என்கிறாள்
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேண்டுகிறேன் என்கிறாள்.
இவளின் புறக்கணிப்பில்
சென்றவர்கள் ஆயிரம் பேர்!
- காலம் செல்கிறது
கட்டளை தளர்கிறது.
வெளிநாட்டு மாப்பிள்ளை
வேண்டாமென்கிறாள்.
உயரம் குறைந்தாலும்
பரவாயில்லை என்கிறாள்.
வசதி இல்லாவிடினும்
வாழ்வித்தால் போதுமென்கிறாள்.
வரன்
தேடுகிறார்கள்.
வருகிறது
வரன்
இரண்டாம் தாரமாய்
முதிர்கன்னி ஆனவளுக்கு!
Entry filed under: கவிதைகள். Tags: ஆணாதிக்கம், இயலாமை, இலக்கியம், இவளின் புறக்கணிப்பில், எதிர்ப்பார்ப்பு, ஏக்கம், கதை, கல்யாணம், கவிதை, கிழவன், கிழவி, தமிழ், திருமணம், படைப்பாளி, படைப்பு, பாடல், பாதுகாப்பு, பெண், பெண் அழைப்பு, பெண் தேடுதல், பெற்றோர், மகளிர், மனம், மாப்பிள்ளை, முதிர்கன்னி, முதுமை, வரதட்சனை.
18 பின்னூட்டங்கள் Add your own
வேல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. ஜெகதீஸ்வரன் | 8:48 முப இல் ஜனவரி 11, 2011
நிறைய பெண்களும், ஆண்களும் இப்படிதான் இருக்கிறார்கள். என் உறவினர் ஒருவருக்கு பெண்பார்க்க அவர்கள் 28 கட்டளைகள் வைத்திருந்தார்கள். இறுதியில் வீட்டிற்கு அடங்காத பெண்தான் வாய்த்தாள்.
படித்திருக்க வேண்டும், வசதியாக இருக்கவேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பார்க்கின்றவர்கள் நல்ல மனமுள்ள ஆண்(பெண்) வேண்டும் என்று நினைப்பதில்லை. விளவு சீர்க்கெட்ட குடும்பம்.
இந்த யதார்த்தத்தினை அப்படியே உங்கள் கவிதை விவரிக்கிறது நண்பா,
2. படைப்பாளி | 9:07 பிப இல் ஜனவரி 11, 2011
மிக்க நன்றி சகோதரா…
3. ஜெகதீஸ்வரன் | 8:50 முப இல் ஜனவரி 11, 2011
பொங்கள் நல்வாழ்த்துகள் நண்பா!.
(பொங்கலுக்கு கிராமத்திற்கு செல்கிறேன் நண்பா!,. அதனால் இப்போதே வாழ்த்தை சொல்லிவிட்டேன்.)
4. படைப்பாளி | 9:07 பிப இல் ஜனவரி 11, 2011
தங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
5. செந்தழல் ரவி | 9:20 முப இல் ஜனவரி 11, 2011
http://tvpravi.blogspot.com/2011/01/blog-post_11.html
உங்களை ஒரு வெளாட்டுக்கு அழைச்சிருக்கேன், பாருங்க.
6. படைப்பாளி | 9:09 பிப இல் ஜனவரி 11, 2011
வெளாட்டுக்கா…. வந்துட்டா போச்சி…
7. எஸ்.கே | 12:59 பிப இல் ஜனவரி 11, 2011
//வருகிறது
வரன்
இரண்டாம் தாரமாய்
முதிர்கன்னி ஆனவளுக்கு! //
கொடுமை! இந்த உலகில் அப்படிப்பட்ட நிலை வராமல் என்றிருக்குமோ!
8. படைப்பாளி | 9:10 பிப இல் ஜனவரி 11, 2011
புரிதல் இருந்தால் நிறையப் பிரச்சினை தீரும் நண்பா..
9. சி.கருணாகரசு | 5:11 பிப இல் ஜனவரி 11, 2011
மிக யதார்த்தமான உணர்வுள்ள கவிதை…. பாராட்டுக்கள்.
10. படைப்பாளி | 9:11 பிப இல் ஜனவரி 11, 2011
மிக்க நன்றி நண்பரே..நீண்ட நாட்கள் கழித்து தங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்..
11. வேல் | 8:48 பிப இல் ஜனவரி 11, 2011
இது நடுத்தர வர்க்கத்தின் நப்பாசைகளில் ஒன்று. ஒவ்வொரு நடுத்தர வர்க்கமும் இதனை தாண்டியே வந்திருக்கிறது. என் குடும்பம் உட்பட.
தவிர்ப்பது எப்படி
எனக்கு என்னால் முடிவெடுக்க முடிந்தது. ஆனால் உடன்பிறந்தோர் எனவாகும் போது அவர்கள் கருத்து அவர்கள் வாழ்க்கை எனவாகும் போது மீறி செய்தால் பின்னாளில் வரும் பேச்சுக்கள்
ஆம் பொருளாதாரம் மற்றொரு காரணம். வசதிக்கு தக்க உறவுகள் இல்லையெனில் அவமானங்கள்.
ஆக நிலமையை மாற்ற வேண்டும்
கவிதையோடு
காரியத்திலும்
12. படைப்பாளி | 9:14 பிப இல் ஜனவரி 11, 2011
முதலில் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
ஆமாம் நண்பரே..நீங்கள் சொல்வதுபோல்,நிலைமையை மாற்ற ஒவ்வொருவரும் மாற வேண்டும்..
13. Uzhavan | 3:21 பிப இல் ஜனவரி 12, 2011
அருமையா சொல்லிருக்கீங்க
14. படைப்பாளி | 9:11 பிப இல் ஜனவரி 12, 2011
உழவரே நன்றி !
15. jsree | 2:57 பிப இல் ஜனவரி 14, 2011
kalam kanthal vazhkai verumai…
16. படைப்பாளி | 9:19 பிப இல் ஜனவரி 23, 2011
hmm..aamaam…
17. ஹேமா | 4:03 முப இல் ஜனவரி 19, 2011
இப்படி நிறையப்பேர் எனக்குத்தெரிய இருக்கிறார்கள்.அப்படியே காத்திருந்து காலம் தாழ்த்திச் செய்ததால் குழந்தையில்லை இப்போ !
18. படைப்பாளி | 9:20 பிப இல் ஜனவரி 23, 2011
ஆமாம் தோழி!