நாற்றமடிக்கிறதென்று !
ஜூன் 4, 2011 at 10:23 முப 6 பின்னூட்டங்கள்
- தூரத்தே நின்று
நாற்றமடிக்கிறதென்று
மூக்கைப் பிடிப்பவர்களே!
- எம் அருகில்
வருவதற்கு அசிங்கமுற்று
தூர நிற்பவர்களே!
- கழிவுநீர் அடைத்துக்கொண்டால்
ச்சீ..என்று காரி உமிழ மட்டுமே
எச்சில் சுறப்பவர்களே!
- ஏளனப் பார்வையால் எமை
குப்பைக்காரன் என்று கூறி
தூற்றி நிற்பவர்களே!
- ஆக்சிஜனை மட்டுமே
சுவாசித்து உயிர்வாழ
உங்கள் உலகம் பழகியிருக்கிறது!
- விஷவாயு
சுவாசித்தும் காலம் தள்ள
எம் இதயம் இளகியிருக்கிறது!
- சாக்கடையில் நாங்கள்
இறங்காவிட்டால்
இந்த சமுதாயம்
நாறிப்போகும் ஞாபகம் வையுங்கள்!
Entry filed under: கவிதைகள். Tags: அழகி, அழகு, ஏழை, ஏழ்மை, கதை, கவிதை, காவியம், குப்பக்காரன், குப்பை, குப்பைக்காரி, சமுதாயம், சாக்கடை, நாற்றம், படைப்பாளி, படைப்பு, பாசம்.
6 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. rathnavel natarajan | 9:29 பிப இல் ஜூன் 4, 2011
நல்ல பதிவு.
நினைக்கவே வேதனைப் படுகிறது.
2. படைப்பாளி | 10:04 முப இல் ஜூன் 6, 2011
மிக்க நன்றி நண்பரே!
3. மதுரை சரவணன் | 1:09 முப இல் ஜூன் 5, 2011
நிச்சயம் நாரி விடுவோம்…. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
4. படைப்பாளி | 10:04 முப இல் ஜூன் 6, 2011
மிக்க நன்றி நண்பரே!!
5. suganthiny | 9:17 முப இல் ஜூன் 6, 2011
ரொம்பவே நன்றாக இருக்கு என்று சொல்லவதை விட இது ஒரு நல்ல பாடம் என்றே
கொள்ளவேண்டும்.
6. படைப்பாளி | 10:05 முப இல் ஜூன் 6, 2011
மிக்க நன்றி தோழி !!