Posts tagged ‘சுவை’
திருடு…!
சிறிது சிறிதாய்
உழைப்பைக் கொடுத்து
சேமித்து எடுத்த
ஈக்களை விடவும்
திருடி பறித்தவன்
தினமும் ருசிக்கிறான்
அதிக தேனை!
இருந்தும் இனிக்கிறது ஏனோ !
ஆறிருக்கு,ஆறுக்கான சுவடிருக்கு
ஆற்றிலே நீரில்லை!
காற்றிருக்கு,காற்றிலே
அதிகமாய் கார்பன் கலந்திருக்கு!
மரமிருக்கு,பச்சையின்றி காய்ந்துபோன
கிளைகள் மட்டும்!
பணம் கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது
அங்கேயும் தண்ணீரை!
விவசாய நிலமிருக்கு
வீட்டுமனைகள் அதிகமாய் விளைந்திருக்கு!
மனிதனிருக்கிறான்,மறத்துப்போன
மனங்களோடு அங்கேயும்!
இப்போதெல்லாம் கிராமத்துக்கும்
நகரத்துக்கும் பெரிய வித்யாசமில்லை!
இருந்தும் இனிக்கிறது
ஏனோ
அது எம் சொந்தஊர்!
அணில் கடித்த பழம்!
அணில் கடித்த பழம்
அதிக சுவையென்று
அறிந்திருந்தேன்
இவ்வளவு நாளாய்!
நான் கடித்த உதடு
அதனினும் இனியது
உணர்ந்தேன்
உன் உதட்டை சுவைத்தபோது !
முதல் பிறந்தநாளில்!
நஞ்சு நிறையா நெஞ்சின்
பிஞ்சு விரல் பிடித்து
கொஞ்சுமொழியில்
குழந்தையோடு குலாவி
கொண்டாடுகிற
முதல் பிறந்தநாளில்
குழந்தையோடு குழந்தையானாள்
குழந்தையை பெற்றவளும்!
ஓராண்டு முன் பிரசவித்தபோது
தாயாய் இருந்தவள்!
இனி வரும் ஆண்டுகளிலும்
தாயாகவே இருப்பவள்!
தலை(வி)யணை காவியம்!
உன் காதலின்
ஆழம்
எவ்வளவு என்று
உன்னிடம்
வினவுகிறேன்!
என்னிடம்
கேட்பதை விட
என் தலையணையிடம்
கேட்டுப்பார்..
உன்னை எண்ணி
நான்
கட்டியணைத்த
தருணங்களையும்
கண்ணீர் சிந்திய
தருணங்களையும்
அது காவியமாய்
சொல்லும்
என்கிறாய் நீ!
என்னை
பொறாமையில்
ஆழ்த்திவிட்டு!