நல்லக்காதல் !
செப்ரெம்பர் 30, 2011 at 10:32 முப 2 பின்னூட்டங்கள்
- இளைப்பாற கொஞ்சம்
இடமும்
களிப்பார கொஞ்சம்
கருணையும்
உன் மடியிலும்
அடியிலுமாய்
என்னை கிடத்தி இருக்கின்றன!
- காமத்தையும்,காதலையும்
தாண்டி
கண்டறிகிறேன்
உன்னிடத்தில்
ஏதோ ஓர் காரணி
என்னை கட்டுண்டு வைத்திருக்க!
- செல்லத் தீண்டலிலும்
உன் செவிமடல் கடிப்பினிலும்
என்னை சிறையிட்டு வைப்பதிலும்
காதலிக்கும் ,மனைவிக்குமான
காலக்கனவை
நீயிட்டு நிரப்புகிறது
உன் நினைவும்,புணர்வும்!
- பாரிய பாசமும்
தேறிய நேசமுமாய்
விசாலமடைகிறது
ஊருக்கு தெரியா
நம் உறவின் நீட்சி!
Entry filed under: கவிதைகள். Tags: அகிலம், அணைப்பு, அன்பு, அரவணைப்பு, உணர்வு, உரிமை, உறவு, உலகம், ஓவியம், கள்ளக்காதல், காதலன், காதலி, காதல், காமம், காவியம், நிறைவு, நீண்ட பயணம், நெகிழ்ச்சி, பயணம், பாசம், மகிழ்ச்சி, மாசு, மாண்பு, முத்தம், மோகம்.
2 பின்னூட்டங்கள் Add your own
பின்னூட்டமொன்றை இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. tamilpaingili | 5:35 பிப இல் செப்ரெம்பர் 30, 2011
enna oru margamaathaan irukkreenga
2. படைப்பாளி | 5:46 பிப இல் செப்ரெம்பர் 30, 2011
maarkam alla mayakkam nu sonnaa thagum..lol!!