அவன்.. இவன்..
ஜூன் 17, 2011 at 11:57 முப 14 பின்னூட்டங்கள்
- அன்றைக்கு ஆண்டை வீட்டின்
கொத்தடிமையாய்
அவன்!
- இன்றைக்கு கல்வியறிவில்
மிக உயர்ந்து மதிப்புமிக்கவனாய்
சமுதாயத்தில் அவன் மகன்
இவன்!
- அன்றைக்கு சேரிக்காரன்
என்று
ஒதுக்கப்படவனாய்
அவன்!
- இன்றைக்கு சேற்றில்
பிறந்த செந்தாமரையாய்
ஒளிமிக்க இவன்!
- அன்றைக்கு அவன் அப்பனை
அடேய் என்றழைத்தான்
உயர்குலத்தான் என்கிற
அவன்!
- இன்றைக்கு அவன் மகனை
வாய்விட்டு வராத வார்த்தைகளால்
சார் என்கிறான் அவனே
இவன்!
- பணம் இருக்கிறது
படிப்பறிவில் உயர்ந்து விட்டான்
சாதி அழிந்துவிட்டது என்கிறான்
அவன்!
- தகுதியில் உயர்ந்தபின்னும்
தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்
இழிகுலத்தான் என்று சொல்லி
கொலைவெறியில்
இவன்!
- தாழ்த்தப்படவன் என்றறிந்தும்
படிக்கும் போது
“மச்சி “என்று
நட்பு பாராட்டியவன்
அவன்!
- தன் குலப்பெண்ணை
காதல் கொண்டான் என்பதற்காய்
கீழ்சாதிக்கார நாய்
என்கிறான் இப்போ
இவன்!
- பள்ளியில் படிக்கிறான்
அவனும் இவனும்
ஒன்றாய்..
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’
Entry filed under: கவிதைகள். Tags: அவன் இவன், இழிநிலை, இழிவு, ஒற்றை டம்ளர் முறை, கொடுமை, கொலை, கொலைவெறி, கொள்ளை, சமுதாயம், சாதி, சாதிக்கொடுமை, சாதிவெறி, ஜாதி, ஜாதிச்சண்டை, தீண்டாமை, பகுத்தறிவு, படம், பாடம்.
14 பின்னூட்டங்கள் Add your own
sakthivel -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. sakthivel | 12:19 பிப இல் ஜூன் 17, 2011
பாராட்டுக்குரியது…
உமது
காலத்திற்கு ஏற்ப பரையேற்றுதல்
தன்மை…
2. படைப்பாளி | 12:40 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி நண்பரே!
3. suganthiny | 1:20 பிப இல் ஜூன் 17, 2011
தங்களின் அவன் இவன் என்ற கவிதை படித்தேன் நன்றாக இருந்திச்சு.
தகுதியில் உயர்ந்தபின்னும்
தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்
இழிகுலத்தான் என்று சொல்லி
கொலைவெறியில்
இவன்! என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.
4. படைப்பாளி | 2:31 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி தோழி!
5. padmahari | 1:44 பிப இல் ஜூன் 17, 2011
பிரமாதம் நண்பா…..
அருமையான கவிதை
வாழ்த்துக்கள்!
6. படைப்பாளி | 2:40 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி நண்பரே!!…
7. Siva Prabu | 2:45 பிப இல் ஜூன் 17, 2011
மிக அருமையான கவிதை
8. படைப்பாளி | 3:10 பிப இல் ஜூன் 17, 2011
மிக்க நன்றி நண்பரே!….
9. THIRUMAVALAVAN R | 5:29 பிப இல் ஜூன் 17, 2011
அவன், இவன் கவிதையெல்லாம் ஒ.கே நண்பா… அந்த அவன், இவன் யாருன்னு நீ கடைசி வரை சொல்லவே இல்லையே??? கவிதை நல்லா இருந்தாலும் இப்படியெல்லாம் கேள்விக் கேட்போம்…..
10. படைப்பாளி | 8:54 முப இல் ஜூன் 18, 2011
ஹா…ஹா…ஆமாம் யாரு நண்பா.. அந்த அவன் இவன்..
11. மதுரை சரவணன் | 11:53 பிப இல் ஜூன் 17, 2011
avan ivan nanraaka errath thaalvinai padam pidiththuk kaattukirathu… vaalththukkal
12. படைப்பாளி | 8:55 முப இல் ஜூன் 18, 2011
மிக்க நன்றி நண்பரே
13. rathnavel natarajan | 2:56 பிப இல் ஜூன் 18, 2011
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
14. jsree | 6:41 பிப இல் ஜூன் 18, 2011
avan evan cute natuarl realistic…manithanin vazhkai tharam marinalum, ego maruvathillai…